எச்சரிக்கையுடன் தொடங்கியது ஜி20 உச்சநிலை மாநாடு

எச்சரிக்கையுடன் தொடங்கியது ஜி20 உச்சநிலை மாநாடு

3 mins read
4f36acad-d973-4cd7-8251-80c731278684
-

பாலித் தீவி­லி­ருந்து

இர்­ஷாத் முஹம்­மது

துணைச் செய்தி ஆசி­ரி­யர்

ஜி20 உச்­ச­நிலை மாநாட்டை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கி­வைத்த இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, 2023 மேலும் மோச­மான ஆண்­டாக மாறக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கை விடுத்­தார்.

உரம் சார்ந்த பிரச்­சினை குறித்து தமது தொடக்க உரை­யில் வலி­யுறுத்­திப் பேசிய திரு விடோடோ, நியா­ய­மான விலை­யில் போது­மான உரம் கிடைப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கா­வி­டில் 2023ஆம் ஆண்டு மேலும் மோச­மான ஆண்­டாக அமை­யக்­கூ­டும் என்று குறிப்­பிட்­டார். தற்­போ­துள்ள அதி­கப்­ப­டி­யான உணவு விலை­கள், உண­வுத் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று திரு விடோடோ சூளு­ரைத்­தார்.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய பொரு­ளி­யல் மீட்­சிக்­கான உந்­து­சக்­தி­யாக ஜி20 இருக்­க­வேண்­டும் என்று இந்­தோ­னீ­சியா விரும்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"வேறு வழி­யில்லை. ஒத்­து­ழைப்பு மூலம்­தான் உலகை நாம் காப்­பாற்­ற­மு­டி­யும்," என்­றார் அவர்.

"உலகை மற்­று­மொரு பனிப் போருக்­குள் தள்­ளக்­கூ­டாது. உல­கைப் பிள­வு­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது," என்­றும் அவர் சொன்­னார்.

அமை­திக்­கான உக்­ரேன் அதி­ப­ரின் பத்து அம்­சத் திட்­டம்

அணு­வா­யு­தப் பாது­காப்பு, உண­வுப் பாது­காப்பு, ரஷ்­யப் போர் குற்­றச்­சாட்­டுக்கு நீதி, மாஸ்­கோ­வு­டன் இறுதி அமைதி ஒப்­பந்­தம் உள்­ளிட்ட பத்து அம்­சங்­கள் அடங்­கிய அமை­திக்­கான திட்­டத்தை முன்­வைத்­தார் உக்­ரேன் அதி­பர் வொலொ­டி­மிர் ஸெலென்ஸ்கி.

காணொளி மூலம் ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டில் நேற்று உரை­யாற்­றிய அவர், ஜி20 தலை­வர்­கள் அவர்­க­ளின் முழு­ மு­தல் சக்­தி­யைக் கொண்டு ரஷ்­யா­வின் அணு­வா­யுத அச்­சு­றுத்­தல்­க­ளைக் கைவிட வைக்கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

அமை­தியை நிலை­நாட்ட இதுவே சரி­யான நேரம் என்று கூறிய ஸெலென்ஸ்கி, தமது நாட்­டில் போரை நிறுத்­து­வ­தற்­கான திட்­டத்­திற்­குப் பின்­னால் 'ஜி19' உல­கத் தலை­வர்­க­ளை­யும் தோள்­கொ­டுக்க அழைப்பு விடுத்­தார்.

மாஸ்­கோ­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் எரி­சக்­தி­யின் விலைக்கு உச்­ச­வ­ரம்­பு விதிக்கவும் அவர் கோரி­னார்.

குளிர்­கா­லத்தை நெருங்­கும் தற்­ச­ம­யம் உக்­ரே­னின் எரி­சக்தி கட்­ட­மைப்­பு­கள் மீதான வெடி­குண்டு தாக்­கு­தல்­களை ரஷ்யா நிறுத்த வேண்­டும் என்­றார்.

ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டில் உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெடுப்பு குறித்தே பெரும்­பா­லான தலை­வர்­கள் பேசி­னர்.

உச்­ச­நிலை மாநாட்­டிற்கு ரஷ்ய அதி­பர் விலா­டி­மிர் புட்­டின் வர­வில்லை. அவ­ரைப் பிர­தி­நி­தித்து நீண்­ட­கால வெளி­யு­றவு அமைச்­சர் செர்கி லவ்­ரொவ் வந்­தி­ருந்­தார். வேறெந்த நாட்­டுத் தலை­வ­ரும் அவ­ரு­டன் எந்­தத் தொடர்­பும் கொள்­ள­வில்லை.

ஸெலென்ஸ்­கி­யின் காணொளி உரை­யின்­போது லவ்­ரொவ் முழு­மை­யாக அரங்­கி­லேயே அமர்ந்து பேச்­சைக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தார். அரங்­க­மும் நிறைந்திருந்தது. அதேபோல் லவ்­ரொவ் பேசி­ய­போது பெரியளவில் வெளி­ந­டப்­பு­கள் இல்லை. ஒன்­பது மாதங்­க­ளாக நீடிக்­கும் இந்­தப் போரை லவ்­ரொவ் ஆத­ரித்தே பேசி­னார்.

இதற்­கி­டையே, இன்று முடி­வுக்கு வரும் உச்­ச­நிலை மாநாட்­டில் கூட்­டறிக்கை கையெ­ழுத்­தா­குமா என்ற சந்­தே­கம் நிலவி வந்த வேளை­யில் பெரும்­பா­லானோர் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யில் அது தயா­ராகி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

அந்தக் கூட்­ட­றிக்­கை­யில் பெரும்­பா­லான தலை­வர்­கள் உக்­ரேன் மீதான போரைச் சாடி­யுள்­ள­தை­யும் மக்­கள் அதி­க­ள­வில் தவித்து­வ­ரு­வதை வலி­யு­றுத்­தி­யுள்­ள­தை­யும் பதி­விட்­டுள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. இது­வரை ரஷ்யா அதைச் சிறப்பு ராணுவ நட­வ­டிக்கை என்றே கூறி­வ­ரு­கிறது. அத­னால் அந்­தப் பத்­தி­ரத்­தில் ரஷ்­யப் போர் என்று குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

உக்­ரேன் மீதான போரை எதிர்த்து ஒலிக்­கும் உல­கக் குரல்

உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெடுப்பை எதிர்த்து உல­கத் தலை­வர்­கள் ஒருங்­கி­ணைந்த வகை­யில் குரல் எழுப்­பி­யுள்­ள­னர்.

இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, போர் நிற்­கா­விட்­டால் உல­கம் முன்­னோக்­கிச் செல்­ல­ முடியாது என்று கூறி­னார்.

"போர் நிற்­கா­விட்­டால் தற்­கால, எதிர்­காலத் தலை­மு­றை­யி­ன­ருக்­காகப் பொறுப்­பு­டன் செயல்­ப­டு­வது கடி­னம்," என்­றார்.

பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனக்­கும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி, "ரஷ்­யா­வின் செயல்­பா­டு­கள் அனை­வ­ரை­யும் ஆபத்­துக்­குள்­ளாக்கு­கின்­றன," என்­றார்.

உல­க­ளா­விய எதிர்ப்­பின் எதி­ரொலி ரஷ்ய அர­சுக்­குக் கேட்­டிருக்­கும் என்றும் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, ஆயு­தம் ஏந்­திய தாக்­கு­தல்­களைக் களைந்து நட்­பு­ற­வின் பாதை­யில் திரும்­பு­வ­தற்­கான வழி­யைக் கண்­டு­பி­டிக்­க­வேண்­டும் என்­றார். எரி­சக்தி விநி­யோ­கத்­திற்­குக் கட்­டுப்­பா­டு­கள் விதிப்­பதை ஊக்கு­விக்­க­வேண்­டாம் என்று மற்ற நாடு­களை திரு மோடி கேட்­டுக்­கொண்­டார்.