மலேசியத் தேர்தல்: அதிகாரிகள் வாக்களித்தனர்

மலேசியத் தேர்தல்: அதிகாரிகள் வாக்களித்தனர்

2 mins read
a2372940-435f-48cb-9050-3239ca236e3a
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 578 வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு நேற்று மொத்­தம் 224,828 அதி­காரி­கள் வாக்­க­ளிக்­கச் சென்­றனர். வரும் 19ஆம் தேதி­யன்று நடை­பெ­ற­வுள்ள 15வது பொதுத் தேர்­தல், புகாயா இடைத்­தேர்­தல் ஆகி­ய­வற்­றுக்­காக முன்­கூட்­டியே வாக்­க­ளித்­தல் நேற்­றுக் காலை 8 மணிக்­குத் தொடங்­கி­யது.

மாநி­லக் காவல் அணித் தலை­மை­ய­கங்­கள், மாவட்ட காவல் தலை­மை­ய­கங்­கள், ராணுவ முகாம்­கள் ஆகி­ய­வற்­றில் ராணுவ அதி­கா­ரி­கள், பொதுச் செயல்­பாட்­டுப் படை அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரு­டன் அவர்­க­ளின் வாழ்க்­கைத்­துணை­யர் வாக்­க­ளித்­த­தாக தேர்­தல் ஆணை­யச் செய­லா­ளர் இக்­மால்­ரு­தீன் இஷாக் தெரி­வித்­தார்.

வாக்­குச்­சீட்­டு­கள் வரும் சனிக்­கி­ழ­மை­யன்று மாலை 4 மணி முதல் எண்­ணப்­படும்,

இதற்­கி­டையே, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்­கான வழி­காட்­டு­தல்­களை மலே­சி­யத் தேர்­தல் ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ள­தாக 'த ஸ்டார்' செய்தி நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டோர் மற்ற வாக்­கா­ளர்­களு­டன் கலந்­தி­ராது சுகா­தார அமைச்சு அதி­கா­ரி­க­ளின் துணை­யு­டன் வாக்­குச் சாவ­டி­களில் வாக்­க­ளிக்க முன்­னு­ரிமை பெறு­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வாக்­குச் சாவ­டி­க­ளின் நுழை­வா­யி­லில் தங்­க­ளின் தொற்று குறித்து வாக்­கா­ளர்­கள் சுகா­தார அமைச்சு அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்று வழி­காட்­டு­தல்­களில் குறிப்­பி­டப்­பட்டு உள்ளது.

அத்­து­டன் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எந்­நே­ர­மும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­ப­தும் அவ­சி­யம். இருப்­பி­னும் அடை­யாளத்தை உறு­திப்­ப­டுத்த அவர்­களின் முகக்­க­வ­சத்­தைத் தற்­காலி­க­மாக இறக்க வேண்­டி­யிருக்­கும்.

இந்­நி­லை­யில், வாக்­க­ளிக்­கப் பயன்­ப­டுத்­தும் மையில் விரலை விடு­வ­தற்கு முன்­னும் பின்­னும் கை சுத்­தி­க­ரிப்­பானை கொவிட்-19 நோயா­ளி­கள் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே பத்­தில் எட்டு மலே­சி­யர்­கள் நவம்­பர் 19 தேர்­தலில் வாக்­க­ளிப்­பர் என்று சிலாங்­கூர் அர­சாங்­கம் தொடர்­பு­டைய நிறு­வ­னம் நடத்­திய கணக்­கெ­டுப்­பில் தெரி­ய­வந்­துள்­ளது.

மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் இம்­முறை வாக்­க­ளிக்­கும் ஆர்­வம் அதி­க­ரித்­துள்­ளதை இந்­தப் புள்ளி­வி­வ­ரம் காட்­டு­வ­தா­கக் கூறப்­படு­கிறது. இருப்­பி­னும், தாங்­கள் வாக்­க­ளிக்­கப் போவ­தில்லை என்று 4.6 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.