கட்டடங்களையும் விட்டுவைக்காத திடீர் வெள்ளம்

கட்டடங்களையும் விட்டுவைக்காத திடீர் வெள்ளம்

1 mins read
348d8807-a596-4da2-8d96-ba79ecaf5083
கனமழையால் ஞாயிற்றுக்கிழமை அன்று வயாங்காலா அணை நிரம்பி அருகிலுள்ள பகுதிக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. படம்: ஏஎஃப்பி -

சிட்னி: முழு கட்­ட­டங்­க­ளைப் பெயர்த்து அடித்­துக்­கொண்டு போகும் அள­வுக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இயு­கோவ்ரா நக­ரில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. நெருக்­கடி நிர்­வாக அதி­கா­ரி­கள் நேற்று இதை நாசம் செய்­யும் 'தண்­ணீர் சுவர்' என்று வர்ணித்­தி­ருந்­த­னர்.

சேறு கலந்த நீருக்­க­டி­யில் சேதம் எந்த அள­வுக்கு உள்­ளது என்­பதைத் தற்­போது மதிப்­பிட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அப்பகுதி மக்கள் தங்­க­ளின் வீட்­டுக் கூரை­கள்­மீது கூடி, மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த ஹெலி­காப்­டர்­க­ளின் மூலம் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

வீடு­கள், கார்­கள், உடை­மை­கள் என மக்­க­ளின் மொத்த சொத்­து­களை­யும் அழிக்­கும் அள­வுக்கு எங்­கும் ஒரே தண்­ணீ­ரும் சேறு­மாகக் காணப்­பட்­டது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கன­மழை கார­ண­மாக வயாங்­காலா அணை நிரம்பி, தண்ணீர் சுவ­ரைக் கடந்­து­வ­ரத் தொடங்­கி­விட்­டது. இயு­கோவ்ரா அரு­கி­லுள்ள நீர்ப்­பிடிப்­புப் பகு­தி­களில் ஏறத்­தாழ 230,000 மெகா­லிட்­டர் தண்­ணீர் பெருக்­கெடுத்து ஓடி­யது.

இந்­நி­லை­யில், பரு­வ­நிலை மாற்­றத்­தால் வெள்ளச் சம்பவங்கள் மேலும் கடு­மை­யாக அமையலாம் என்று விஞ்­ஞா­னி­கள் கணித்­துள்­ள­னர்.