லண்டன்: பிரிட்டனில் விலைவாசி உயர்வு காரணமாக, கடைகளில் திருடுவது கடந்த 12 மாதங்களில் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ள பிரிட்டனில் முக்கிய உணவு வகைகளான ரொட்டி, பாஸ்தா போன்றவற்றின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இதனால், மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இனிவரும் நாள்களில் பணவீக்கம் மேலும் மோசமைடையும் என்பதால், திருட்டுச் சம்பவங்களும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க கடைக்காரர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
வழக்கமாக மதுபானம் போன்ற விலையுயர்ந்த பொருட்களில் திருட்டு-தடுப்பு சாதனங்களை இணைக்கும் கடைக்காரர்கள், தற்போது, வெண்ணெய், பாலாடைக்கட்டி, சலவை சோப்பு, புரோட்டீன் துண்டுகள் போன்ற சாதாரண பொருள்கள் மீதும் அச்சாதனங்களைப் பொறுத்துகின்றனர். இவற்றில் சிலவற்றின் விலை வெறும் 2 பவுண்டுகளேயாகும். (3.27 வெள்ளி).
மளிகைப் பொருட்களின் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த மாதம் 14.7 விழுக்காடானது. இதனால் வருடாந்திர மளிகை செலவு சராசரியாக 682 பவுண்டு அதிகரித்து உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது.

