அம்னோ தகவல் பிரிவுக்கு புதிய தலைவர்

அம்னோ தகவல் பிரிவுக்கு புதிய தலைவர்

1 mins read
d5c395b1-0eec-452d-96a6-202ae603729f
-

கோலா­லம்­பூர்: அம்னோ கட்­சி­யின் உயர்­நி­லைக் குழு உறுப்­பி­ன­ரும் அர­சி­யல் உத்­தி­யா­ள­ரு­மான ஹிசா­துல் இஷாம் அப்­துல் ஜலீல் (படம்), கட்­சித் தக­வல் பிரி­வின் புதிய தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரது நிய­ம­னம் நேற்று முதல் நடப்­புக்கு வந்­துள்­ள­தாக கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் அக­மது மஸ்­லான் உறு­தி­செய்­தார்.

திரு இஷாம் ஜலீலும் ஃபேஸ்புக்­கில் தமது நிய­ம­னம் குறித்து தெரி­வித்­துள்­ளார். அண்­மைத் தேர்­த­லில் அவர் ஷா அலாம் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யுற்­றார்.

முன்­ன­தாக நேற்­றுக் காலை அம்­னோ­வின் தக­வல் பிரி­வுத் தலை­வர் ஷரில் சுஃபியான் ஹம்­டான் பதவி வில­கி­னார்.

அண்மைத் தேர்தலில் அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தேர்­தல் தோல்­விக்­குப் பொறுப்­பேற்று பதவி வில­கு­வ­தா­கக் கூறினார்.

தேசிய முன்­னணி தோல்­வி­க்குப் பொறுப்பேற்று, தலைவர் அக­மது ஸாகிட் பதவி வில­க­வேண்­டும் என்­று அவர் வலி­யு­றுத்­தி­னார். ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபீஸ் காஸியும் ஸாகிட் பதவி விலகவேண்டும் என்று கூறினார்.