வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் மேலும் பலர் இன்று ஆள்குறைப்புக்கு ஆளாக நேரிடும் என்று கருதப்படுகிறது.
நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இம்முறை விற்பனை, பங்காளித்துவப் பிரிவுகளைக் குறிவைக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
நீண்ட நேரம் வேலை செய்ய ஒப்புக்கொண்டு ஊழியர்கள் வேலையில் தொடரலாம் அல்லது இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு நிறுவனத்தில் இருந்து விலகலாம் என்ற தெரிவுகளைத் திரு மஸ்க் வழங்கிஉள்ளார். விற்பனை, பங்காளித்துவப் பிரிவுகளின் தலைவர்கள் ஆள்குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

