அலோர் ஸ்டார்: மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில், கெடா, பெர்லிஸ் ஆகிய தேர்தல் களங்களில் மொத்தம் 43 பேர் தேர்தல் வைப்புத்தொகையை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட்ட தொகுதிகளில் குறைந்தது 10 விழுக்காட்டு மொத்த வாக்குகளைப் பெறாதவர்கள் இவ்வாறு வைப்புத்தொகையை இழக்க நேரிடும்.
இந்த 43 பேரில் 25 பேர் கெடா நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டவர்கள்.
பெர்லிசில் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்ட நால்வரும் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்குப் போட்டியிட்ட 18 பேரும் வைப்புத்தொகையை இழந்தனர்.
கெடாவில் வைப்புத்தொகை இழந்தவர்களில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் முறையே ஒன்பது விழுக்காடு மற்றும் ஆறு விழுக்காட்டு வாக்கு களைப் பெற்றனர்.
டாக்டர் மகாதீரின் 'ஜிடிஏ' கூட்டணியின் அனைத்து 14 வேட்பாளர்களும் கெடாவில் வைப்புத்தொகையை இழந்தனர்.
பெர்லிசில் வாரிசான் வேட்பாளர்கள், 'ஜிடிஏ' கூட்டணி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலரும் வைப்புத்தொகையை இழந்துள்ளனர்.

