பேராக், பாஹாங் மாநிலங்களில் பரம வைரிகள் கைகோர்ப்பு

பேராக், பாஹாங் மாநிலங்களில் பரம வைரிகள் கைகோர்ப்பு

2 mins read
49bb5f33-e6a2-44f4-a7fb-eeb626f7c46d
மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா சுல்­தான் அஹ­மட் ஷா, நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து இன்று பிற்பகல் 2.00 மணி வரை காலக்­கெ­டுவை நீட்­டிப்­ப­தாக அறி­வித்­தார். அதற்­குள் ஆட்­சி ­அ­மைப்­ப­தற்­கான உறுப்­பி­னர் ஆத­ரவை கூட்­ட­ணிக் கட்­சி­கள் திரட்ட வேண்­டும். தேசிய முன்­ன­ணி­யின் கோரிக்­கையை ஏற்று நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு முடி­வ­தாக இருந்த காலக்­கெ­டுவை மன்­னர் நீட்­டித்­துள்­ளார். படம்: ராய்ட்­டர்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அர­சி­யல் பர­ம­வை­ரி­க­ளான பக்­கத்­தான் ஹரப்­பா­னும் அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­ன­ணி­யும் பேராக், பாஹாங் மாநி­லத்­தில் ஆட்சி­ய­மைக்க கைகோர்த்­துள்­ளன.

இந்த, இரு தரப்­பு­க­ளுக்­கான புதிய கூட்­டணி மலே­சிய அர­சி­ய­லில் புதிய திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி ­யுள்­ளது.

பிர­த­மர் வேட்­பா­ள­ரான அன்­வார் இப்­ரா­ஹிம் தலை­மை­யி­லான பக்­கத்­தான் ஹரப்­பான், இரு மாநி­லங்­க­ளி­லும் ஆட்­சி­ய­மைக்­கத் தேவை­யான உறுப்­பி­னர்­களின் ஆத­ரவை வழங்கியுள்ளது.

இரு மாநி­லங்­க­ளி­லும் தேசிய முன்­ன­ணி­யைச் சேர்ந்த ஒரு­வர் முதல்­வ­ரா­க­வும் அது ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. இது, இரு மாநி­லங்­க­ளி­லும் நிலவிய முட்­டுக்­கட்­டைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும்.

கடந்த சனிக்­கி­ழமை நடந்து முடிந்த தேர்­த­லுக்­குப் பிறகு இரு மாநி­லத்­தி­லும் யாரும் ஆட்­சி­ அமைப்­ப­தற்­கான பெரும்­பான்­மை­யைப் பெற­வில்லை.

இந்த நிலை­யில் அம்­னோ­வைச் சேர்ந்த சாரணி முக­மட் நேற்று மாலை பேராக் முதல்­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

பேராக்­கில் 59 சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் இருக்­கின்­றன. தேசிய முன்­னணி ஒன்­பது இடங்­களில் மட்­டுமே வெற்றி பெற்­றது. பக்­கத்­தான் ஹரப்­பான் 24 இடங்­களில் வெற்றி பெற்­றது. இரு தரப்­பும் கூட்டு சேர்ந்­துள்­ள­தால் மொத்­தம் 33 இடங்­க­ளு­டன் அவை முன்­னிலை வகிக்­கும்.

பேராக்­கில் ஆட்­சி­ய­மைக்க குறைந்­த­பட்­சம் 30 இடங்­கள் தேவை. அதற்­கும் மேலாக இருப்­ப­தால் பக்­கத்­தான் ஹரப்­பான்-தேசிய முன்­ன­ணிக்கு ஆட்சி அமைப்­ப­தில் பிரச்­சி­னை­யில்லை.

பாஹாங்­கில் தேசிய முன்­னணி (பிஎன்) 16 இடங்­க­ளி­லும் பக்­கத்­தான் ஹரப்­பான் எட்டு இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளன. இரண்டு கூட்­ட­ணி­க­ளின் மொத்த இடங்­கள் 24ஆக இருப்­ப­தால் பெரும்­பான்­மைக்­குத் தேவை­யான 22க்கு மேல் உள்­ளது. இம்­மா­நி­லத்­தின் மொத்த சட்­ட­மன்ற இடங்­கள் 42.

முன்­னைய பிர­த­ம­ரான முகை­தீன் யாசின் தலை­மை­யி­லான பெரிக்­காத்­தான் நேஷ­னல் பேராக்­கில் 26 இடங்­க­ளி­லும் பாஹாங்­கில் 17 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றுள்­ளது. ஆனால் இரு மாநி­லங்­க­ளி­லும் பெரிக்­காத்­தான் நேஷ­னல் ஆட்­சி­ய­மைக்க முடி­யா­மல் எதிர்க்­கட்­சி­யாகி உள்­ளது.

பாஹாங்­கில் பக்­கத்­தான் ஹரப்­பான்-தேசிய முன்­னணி கூட்­டணி பற்றி நேற்று மாலை வரை அதி­கா­ர­பூர்­வமாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இரு மாநி­லங்­க­ளி­லும் பக்­கத்­தான் ஹரப்­பான், தேசிய முன்­ன­ணிக்கு ஏற்­பட்டுள்ள புதிய உறவு, தேசிய அள­வி­லும் எதி­ரொ­லிக்­க­லாம் எனப் பரவலாக எதிர்­பார்க்கப்­ப­டு­கிறது.