தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் தோல்விக்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ரசிக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி

1 mins read
14aafa7d-da5b-4d00-96b0-027c1dcb542e
முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தற்போது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஆர்வத்துடன் பார்த்து வருகிறார். படம்: கைரி/இன்ஸ்டகிராம் -

கோலா­லம்­பூர்: அண்­மைய மலே­சிய பொதுத்தேர்­த­லில் தோல்­வியடைந்த முன்­னாள் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன், உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியை ரசித்து வருகிறார்.

"எனது பாதை முடிந்­து­வி­ட­வில்லை. அடுத்து என்ன செய்ய வேண்­டும் என்று சிந்­திக்க வேண்­டிய நேர­மிது, அது­வரை தொலைக்­காட்­சி­யில் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­க­ளைக் காண ஆவலு­டன் இருக்கிறேன்," என்று சுங்கை புலோ தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டி யிட்ட கைரி குறிப்­பிட்­டார்.

பதினான்கு நாள் கடுமையான தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

"உண்­மை­யில் சோர்­வ­டைந்­து­விட்­டேன். தொற்­று­நோயை நிர்­வ­கிக்­கும்­படி என்­னி­டம் கேட்­டுக்­கொண்டபிறகு எனக்கு ஓய்வே இல்லை. கொவிட்-19 தொற்­றி­ல் இ­ருந்து நாட்டை மீட்­டெ­டுப்பதற்கு இரண்டு ஆண்­டு­கள் சிர­ம­மாக இருந்­தது. ஆனால் இந்த இக்­கட்­டான நேரத்­தில் நாட்­டுக்கு சேவை­யாற்­றி­யதை பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன். பல நாடு­க­ளைப்­போல நமது நாடும் மீண்டு வந்­தது எனக்கு மகிழ்ச்­சியை அளிக்­கிறது," என்றும் அவர் தெரி­வித்­தார்.

2020 முதல் சுகா­தார மற்­றும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், புத்­தாக்க அமைச்­ச­ராகப் பொறுப்பு வகித்த திரு கைரி, கொவிட்-19 தொற்­று­நோயை நிர்­வ­கிப்­ப­தில் முக்­கிய பங்­காற்­றி­னார்.

15வது பொதுத் தேர்­த­லில் சுங்கை புலோ­வில் கடு­மை­யான ஏழு முனைப் போட்டி நில­வி­யது. பக்­கத்­தான் ஹரப்­பான் வேட்­பா­ள­ரான ரம­ணன் ராம­கி­ருஷ்­ண­னி­டம் சுமார் 2,693 வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவ­ர் தோல்­வி அடைந்தார்.

தேர்­தல் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து­கொண்ட அவர், அர­சி­யல்­வா­தி­யாக ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு முறை பகி­ரங்­க­மா­கப் பரி­சீ­லிக்­கப்­ ப­டு­வது வேத­னையாக இருக்கிறது, என்­றார்.