தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனா: தொழிற்சாலையில் தீ விபத்து; 38 பேர் பலி

2 mins read
51e6a9e8-816a-4f75-893f-2fb4bd79166c
சீனாவின் ஹேனான் மாநிலத்தின் அன்­யாங் நக­ரில் உள்ள ஒரு தொழிற்­சா­லை­யில் நிகழ்ந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த போராடும் தீயணைப்புாளர்கள். படம்: சிசிடிவி -

பெய்­ஜிங்: சீனா­வில் தொழிற்­சாலை­ ஒன்றில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் ஏற்­பட்ட தீ விபத்­தில் 38 பேர் பலி­யா­யி­னர். மாண்­ட­வர்­களில் பெரும்­பா­லோர் பெண்­கள். விதி­மு­றை­களை மீறிய வகை­யில் நடந்த உலோக பற்­ற­வைப்­புப் பணியே இந்த தீ விபத்­துக்­குக் கார­ணம் என்று உள்­ளூர் ஊட­கம் ஒன்று தெரி­வித்­தது.

ஹேனான் மாகா­ணத்­தில் மத்­திய பகு­தி­யில் உள்ள அன்­யாங் நக­ரில் உள்ள ஒரு தொழிற்­சா­லை­யில் இந்த விபத்து நிகழ்ந்­தது. கட்­டுக்­க­டங்­கா­மல் கொழுந்­து­விட்டு எரிந்த தீயைக் கட்­டுப்­படுத்த 63 வாக­னங்­கள் பயன்­படுத்­தப்­பட்­டன என்று சீனா­வின் சிசி­டிவி தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

இந்­தத் தீ விபத்­தில் சிக்­கிய இரு­வர் காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­க­வும், மேலும் இரு­வ­ரைக் காண­வில்லை என­வும் அந்­தத் தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

கொழுந்­து­விட்டு எரி­யும் கரும்­புகை நாலா­பக்­க­மும் சூழ்ந்­தி­ருந்த காட்­சியை அந்­தத் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­பி­யது. தீய­ணைப்பு வீரர்­க­ளின் கடு­மை­யான போராட்­டத்­திற்­குப் பிறகு அன்று பின்­னி­ர­வில் தீ கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அந்­தத் தொழிற்­சா­லை­யைச் சேர்ந்த பொறுப்­பா­ளர் ஒரு­வரை காவல்­துறை கைது­செய்து விசா­ரணை மேற்­கொண்­டு­வ­ரு­கிறது.

அன்­யாங் தீ விபத்­தைத் தொடர்ந்து, தையு­வான் என்­னு­மி­டத்­தில் ஒரு ராசா­யன தொழிற்­சா­லை­யில் வெடிப்பு நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­தச் சம்­ப­வத்­தில் உயிர்ச்­சே­தம் குறித்து எந்­தத் தக­வ­லும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த ஜூன் மாத­மும் இது­போன்று, ஷாங்­காய் நக­ரில் உள்ள ரசா­யன ஆலை­யில் தீ விபத்து ஏற்­பட்டு ஒரு­வர் பலி­யா­னார்.

அதே­போல் கடந்த ஆண்டு ஜின்­ஷான் மாவட்­டத்­தில் சினோ­பெக் பெட்­ரோ­கெ­மிக்­கல் ஆலை­யில் நடந்த வெடிப்­புச் சம்­ப­வத்­தில் 25 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

2019 மார்ச் மாதம் ஷாங்­காய் நக­ரில் இருந்து 260 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள யான்­செங் என்­னு­மி­டத்­தில் ரசா­யன ஆலை­யில் நடந்த வெடிப்­புச் சம்­ப­வத்­தில் 78 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

2015ஆம் ஆண்டு, ரசா­ய­னப் பொருள்­கள் வைக்­கப்­பட்­டி­ருந்த கிடங்கில் நடந்த வெடிப்­புச் சம்­ப­வத்­தில் 165 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இதுவே சீனா­வில் நடந்த மிகப்­பெ­ரிய தொழிற்­சாலை விபத்­தா­கக் கூறப்­ப­டு­கிறது.