டெல் அவிவ்: இஸ்ரேலின் ஜெரு
சலம் நகரின் புறநகர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் குறைந்தது ஒருவர் மாண்டார். தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமுற்றனர். தாக்கு
தலுக்கு பாலஸ்தீனப் போராளிகள் காரணம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். நகருக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் உச்சவேளையின்போது முதல் வெடிகுண்டு வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து மற்றொரு பேருந்து நிறுத் தத்தில் இன்னொரு வெடிகுண்டு வெடித்தது. "இத்தகைய திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்கள் கடந்த பல ஆண்டுகளாக ஜெருசலத்தில் நிகழவில்லை," என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்தது.
வெடிகுண்டுகள் பைக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்த குறைந்தது ஒரு வெடிகுண்டில் ஆணிகள் பொருத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பேருந்துக்கு அருகில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். படம்: ஏஎஃப்பி

