மன்னிப்பு கேட்ட லிம் குவான் எங்; ஏற்றுக்கொண்ட சரவாக்

மன்னிப்பு கேட்ட லிம் குவான் எங்; ஏற்றுக்கொண்ட சரவாக்

2 mins read
3746b9ec-0902-4f38-8c26-93b1f7757637
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் ஜன­நா­யக செயல் கட்­சித் தலை­வர் லிம் குவான் எங், சர­வாக் அர­சாங்­கத்­தி­ட­மும் அம்­மா­நில மக்­க­ளி­ட­மும் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டார். தாம் கூறிய கருத்­து­ கள் சர­வாக் அர­சாங்­கம் மற்­றும் மக்­க­ளின் மன­தைப் புண்­ப­டுத்­தி இ­ருந்­தால் அதற்கு மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­வ­தாக அவர் கூறி­னார்.

கசப்­பு­ணர்­வு­களை ஒதுக்கி, புதிய நல்­லு­ற­வு­டன் சர­வாக்கை ஆட்சி செய்ய வேண்­டும் என்று பினாங்கு மாநி­லத்­தின் பாகான் தொகுதி நாடா­ளுமன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு லிம் கேட்­டுக்­கொண்­டார். மலே­சி­யா­வின் பன்­மு­கத்­தன்­மை­யைக் கட்­டிக்­காப்­பது மிக­வும் முக்­கி­யம் என்­றும் அனை­

வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமு­தா­யம் அவ­சி­யம் என்றும் திரு லிம் தெரி­வித்­தார்.

"நாட்­டின் எதிர்­கா­லம் மிக­வும் முக்­கி­யம். உற­வைப் புதுப்­பித்து, ஒத்­து­ழைத்து நாட்­டின் கூட்­ட­ரசு அர­ச­மைப்­புச் சட்­டத்­தைப் பாது­காப்­போம். அப்­போ­து­தான்

மலே­சி­ய தீப­கற்­பம், சாபா, சர­வாக் ஆகிய இடங்­களில் உள்ள அனைத்து மலே­சி­யர்­களும் பல­ன் அடை­வர்," என்­றார் திரு லிம்.

இதற்கு முன்­ன­தாக, ஜன­நா­யக செயல் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் ஆண்­டனி லோக், சர­வாக் முதல்­வர் அபாங் ஜொஹாரி அபாங் ஹாஜி ஒபெங்கை சர­வாக் தலை­ந­கர் கூச்­சிங்­கில் சந்­தித்­துப் பேசி­னார்.

"நட்­பு­ணர்­வு­டன் கலந்­து­ரை­யாடி­னோம். சர­வாக் அர­சாங்­கம் மற்றும் மக்­க­ளின் மன­தைப் புண்­படும் வகை­யில் ஜன­நா­யக செயல் கட்சி கருத்து ஏதும் தெரி­வித்­தி­ருந்­தால் அதற்­கா­கப் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு தெரி­வித்­துக்­கொள்­வ­தாக அபாங் ஜொஹா­ரி­யி­டம் தெரி­வித்­துக்­கொண்­டேன்," என்று திரு லோக் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ஜன­நாயக செயல் கட்சி கேட்ட மன்­னிப்பை முழு­ம­ன­து­டன் சர­வாக் அர­சாங்­க­மும் மக்­களும் ஏற்­றுக்­கொள்­வ­தாக அம்­மா­நி­லத்­தின் சுற்­றுப்­

ப­ய­ணத்­துறை அமைச்­சர் அப்­துல் கரீம் ரஹ்­மான் ஹம்சா தெரி­வித்­தார். மிகப் பெரிய மன­து­டன் சர­வாக்­கிற்கு நேரில் வந்து திரு லோக் மன்­னிப்பு கேட்­டதை அவர் சுட்­டி­னார்.

"கடந்த பல ஆண்­டு­க­ளாக சர­வாக் கட்­சி­க­ளுக்­கும் ஜன­நா­யக செயல் கட்­சிக்­கும் இடையே கசப்­பு­ணர்வு இருந்­தது. ஜன­நா­யக செயல் கட்­சி­யின் தலைமை பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டதை அடுத்து, எல்­லாம் சரி­யா­கி­விட்­டது. சிதைந்து கிடந்த உறவு இனி சீரான, நட்­பு­ப் பாதை­யில் செல்­லும்," என்­றார் திரு கரீம். திரு லிம் மன்­னிப்பு கேட்டுக் ­கொண்­டது குறித்து திரு கரீம் மகிழ்ச்சி தெரி­வித்­தார். "திரு லிம் முன்பு கொட்­டிய வார்த்­தை­கள் சர­வாக்­கில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. சர­வாக் நொடித்­துப்­போ­கும் என்று அவர் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால் இப்­போது அவர் அதற்­காக மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டார். இது வர­வேற்­கத்­தக்­கது,"

என்­றார் திரு கரீம்.