கோலாலம்பூர்: பாடாங் சிராய் நாடாளுமன்றத் தொகுதிக்கும் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்குமான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது.
இவ்விரு தொகுதிகளிலும் களமிறங்கிய வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் வாக்களிப்பு அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வேட்புமனுத் தாக்கல் நிறை
வடைந்துள்ள நிலையில், கெடா மாநிலத்தில் உள்ள பாடாங்
சிராயில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பக்கத்தான் ஹரப்பான் சார்பாக முகம்மது சோஃபி ரசாக், தேசிய முன்னணி சார்பாக மலேசிய இந்தியர் காங்கிரஸின் சிவராஜ் சந்திரன், பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக அஸ்மான் நஸ்ருதீன், வாரிசான் சார்பாக பக்ரி ஹஷிம், சுயேச்சை வேட்பாளராக ஸ்ரீநந்தா ராவ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
தியோமானில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி, டாக்டர் மகாதீரின் பெஜுவான் கட்சி போட்டியிடுகின்றன.
சுயேச்சை வேட்பாளர்
ஒருவரும் களமிறங்குகிறார்.

