மலேசியா: ஐக்கிய அரசில் சேர்வது குறித்து பாஸ் கட்சி ஆலோசனை

மலேசியா: ஐக்கிய அரசில் சேர்வது குறித்து பாஸ் கட்சி ஆலோசனை

2 mins read
1e0eb334-18a5-4500-ae77-b056b739ea41
அன்வாரின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்து சூழ்ந்த மக்கள்மலேசியாவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம், பதவியேற்றதற்குப் பிறகு முதன்முதலில் பொதுவெளியில் மக்களைச் சந்தித்தார். புத்ராஜெயாவில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்துத் திரும்பியபோது, அங்கு அவருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஏராளமானோர் அவரைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம்­மின் ஐக்­கிய அர­சாங்­கத்­தில் சேர்­வது குறித்து தமது பெரிக்­காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளு­டன் ஆலோ­சிக்க உள்­ள­தாக பாஸ் எனப்­படும் மலே­சிய இஸ்­லா­மிய கட்சி கூறி­யுள்­ளது.

இது­பற்­றிக் கூறிய பாஸ் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் முன்­னாள் சட்ட அமைச்­ச­ரு­மான தாக்­கி­யு­டின் ஹசான், "பிர­த­மர் தனது ஐக்­கிய அர­சாங்­கத்­தில் சேர அழைப்பு விடுத்­தி­ருப்­ப­தற்கு நாங்­கள் நன்றி தெரிவித்­துக் கொள்­கி­றோம்," என நேற்­றுத் தெரி­வித்­தார்.

தொடர்ந்து பேசிய திரு தாக்­கி­யு­டின், 15வது பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு நாட்­டின் தலை­மைத்­து­வம் தொடர்­பாக எழுந்த சிக்­கல் சுமு­க­மா­க­வும் அமை­தி­யா­க­வும் தீர்க்­கப்­பட்­ட­தற்கு பாஸ் நன்­றிக்­கடன் பட்­டுள்­ளது. இதில் தங்­கள் கட்சி மாமன்­ன­ரின் முடிவை ஏற்­ப­தாக அவர் கூறி­னார்.

"மாமன்­னரை மதிப்­ப­து­டன் அவர் தனக்­குள்ள அதி­கா­ரத்­தின்­படி, குறிப்­பாக கூட்­ட­ர­சின் அர­சி­யல் சாச­னத்­தின்­படி, அவர் பிர­த­மர் தேர்­வில் எடுத்த முடிவை நாங்­கள் பாராட்­டு­கி­றோம்," என்று அவர் சொன்­னார்.

முன்­ன­தாக, வியா­ழ­னன்று அன்வார் இப்­ரா­கிம் 24 ஆண்­டு­கள் காத்­தி­ருந்த பின் அன்­வார் இப்­ரா­கிம், 75, மலே­சி­யா­வின் 10வது பிர­த­ம­ராக பத­விப் பிர­மா­ணம் ஏற்­றுக்­கொண்­டார்.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணித் தலை­வ­ரு­மான அவர், இம்­மா­தம் 19ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்தைக் கூட்­டும் திட்­டத்­தில் உள்­ளார். அன்று நாடா­ளு­மன்­றத்­தின் முதல் அலு­வ­லாக தமது அர­சுக்கு நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு கோர உள்­ளார் திரு அன்­வார்.

மலே­சிய மாமன்­னர் அன்­வார் இப்­ரா­கிம்மை பிர­த­மர் பத­விக்­காக தேர்வு செய்த முடிவை ஏற்க பெரிக்­காத்­தான் கூட்­ட­ணி­யின் தலை­வர் முகை­தீன் யாசின் மறுத்­த­தைத் தொடர்ந்து மேற்­கூ­றி­ய­படி நடந்­தது. இது குறித்­துப் பேசிய முகை­தீன் யாசின், தமக்கு 115 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு இருப்­ப­தற்­கான ஆதா­ரத்தை மாமன்­ன­ரி­டம் தாம் சமர்ப்­பித்­துள்­ள­தா­கக் கூறி பிர­த­மர் பத­விக்கு அன்­வார் தேர்வு செய்­யப்­பட்­டதை எதிர்த்­தார்.

இதற்­கி­டையே, திரு முகை­தீன் யாசின் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி அர­சின் குறை, நிறை­க­ளைக் கண்­கா­ணித்து அதற்­கேற்­ற­படி தமது கூட்­டணி செயல்­படும் என்று கூறி­யுள்­ளார்.

"பெரிக்­காத்­தான் நேஷ­னல் நாடா­ளு­மன்ற ஜன­நா­யக மர­பு­கள் வழி மக்­கள் குரலை எதி­ரொ­லிக்­கும். மக்­கள் நல­னுக்­கும் நாட்­டின் வளப்­பத்­துக்­கும் நாங்­கள் தொடர்ந்து பாடு­ப­டு­வோம்," என்று திரு முகை­தீன் யாசின் விளக்­கி­னார்.