அன்வார்: மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது

அன்வார்: மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது

1 mins read
15ba3283-d2f4-4356-a85c-cd33f47c4038
-

கோலாலம்பூர்: மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் தனக்கு மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை உள்­ள­தாக பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்­துள்­ளார்.

சாபா மாநி­லத்­தில் ஆறு இடங்­க­ளைக் கைப்­பற்­றிய அர­சி­யல் கட்சி ஒன்று தனது ஐக்­கிய அர­சாங்­கத்­தில் இணை­யும் என்­றும் அப்­போது தமக்கு மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு கிட்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளார். கபுங்­கான் ரக்­யாட் சாபா (ஜிஆர்­எஸ்) கட்சி, ஐக்­கிய அர­சில் இணைய இணங்­கி­யுள்­ள­தாக நேற்று அவர் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தின் எங்­கள் பலம் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யைக் கொண்­டி­ருப்­ப­தால் நாட்­டின் நிலைத்­தன்­மையை வலுப்­ப­டுத்­து­வ­து­டன் பொரு­ளி­யலை முன்­னோக்­கிக் கொண்டு செல்ல இது கைகொ­டுக்­கும் என்று செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் அன்­வார் தெரி­வித்­தார்.

முந்­தைய அர­சாங்­கத்­தை­விட புதிய அர­சாங்­கத்­தில் அமைச்­ச­ர­வை­யில் உள்ள அமைச்­சர்­க­ளின் எண்­ணிக்கை குறைக்­கப்­படும். அத்­து­டன் அவர்­க­ளது சம்­ப­ள­மும் குறைக்­கப்­படும் என்­றும் பிர­த­மர் அன்­வார் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

விலை­வாசி உயர்­வால் அவ­திப்­படும் மக்­க­ளின் நிலை கருதி, தாம் சம்­ப­ளம் எது­வும் பெறப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தின் கீழ­வை­யில் அவ­ரது ஐக்­கிய அர­சாங்­கத்­தில் உள்ள மிகப் பெரிய அணி­களில் அவ­ரது பக்­காத்­தான் ஹராப்­பான் கூட்­டணி 82 இடங்­க­ளை­யும், பாரி­சான் நேச­னல் 30 இடங்­க­ளை­யும், கபுங்­கான் பார்ட்டி சர­வாக் 23 இடங்­க­ளை­யும் கொண்­டுள்­ளது.

எனவே, இப்­போது ஐக்­கிய அர­சாங்­கம் மொத்­தம் 135 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டுள்­ளது. 222 இடங்­க­ளைக் கொண்ட கீழ­வை­யில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யைப் பெறு­வ­தற்கு 148 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தேவை.