பிரேசில் பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு

பிரேசில் பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு

1 mins read
14446ada-0350-4dd0-96ee-4445e1e4b5a2
துப்பாக்கிச் சூட்டில் மாண்ட ஒருவரின் உடலை அதிகாரிகள் கொண்டு சென்றனர். இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி -

பிரே­சி­லியா: பிரே­சில் நாட்­டின் இரண்டு பள்­ளிக்­கூ­டங்­களில் நடந்த துப்­பாக்­கிச்­சூ­டு­களில் மூன்று பேர் மாண்­டு­விட்­ட­னர். மேலும் 11 பேர் காய­ம­டைந்­த­னர்.

அந்­நாட்­டின் எஸ்­பி­ரிட்டோ சான்டோ மாநி­லத்­தின் அரா­கு­ரூஸ் என்ற நக­ரில் உள்­ளூர் நேரப்­படி வெள்­ளிக்­கி­ழமை காலை இச்­சம்­ப­வங்­கள் நடந்­தன. தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக சந்­தே­தி­கிக்கப்­படும்

16 வயது நபரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

சம்­ப­வத்­தன்று முத­லில் தனது முன்­னாள் பள்­ளிக்­கூ­டத்­திற்­குச் சென்ற அந்த தாக்­கு­தல்­கா­ரர் ஆசி­ரி­யர்­களை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில் இரு­வர் மாண்­ட­தா­க­வும் ஒன்­பது பேர் காய­ம­டைந்­த­தா­க­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அதன் பிறகு அரு­கில் இருந்த தனி­யார் பள்­ளிக்­கூ­டத்­திற்­குள் சென்ற அதே நபர், அங்கு பதின்ம வயது பெண் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்­றார். மேலும் இரு­வர் காய­ம­டைந்­த­னர்.

காய­ம­டைந்­த­வர்­களில் சில­ரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.