டர்பன்: கொவிட்-19 கிருமியின் புதிய திரிபு மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று தென்னாப்பிரிக்க ஆய்வகம் ஒன்றின் ஆய்வு கூறுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கொவிட்-19 மாதிரிகளை ஆய்வு செய்த பிறகு, புதிய திரிபு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உருவெடுக்கும் என்று அது கூறுகிறது. ஒமிக்ரான் திரிபைக் காட்டிலும் அது கடுமையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்று கடந்த ஆறு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது.
தொடக்கத்தில், ஆய்வு மாதிரிகள், ஓமிக்ரான் பிஏ.1 கிருமியை போன்று இருந்தாலும் ஆறு மாத காலத்தில், அது சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட தீவிரமான கிருமியைப் போன்று மாறியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, புதிய திரிபு கடுமையான உடல்நல பாதிப்பையும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

