சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

2 mins read
cf157fdf-dc8e-4f21-8b63-c5222d1a4236
பெய்ஜிங்கில் உள்ள ட்சிங்ஹுவா பல்கலைக்கழக வளாகத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிடுகின்றனர். காணொளிப் படம்: ராய்ட்டர்ஸ் -

நாடு முழுவதும் பரவிய ஆர்ப்பாட்டம்; கொவிட்-19 கொள்கையில் மாற்றமில்லை என்கிறது சீன அரசாங்கம்; ஸி பதவி விலகக் கோரிக்கை

பெய்­ஜிங்: சீனா, தனது நாட்­டில் இருந்து கொவிட்-19 தொற்றை முற்றிலும் துடைத்­தொ­ழிக்­கும் முயற்­சி­யில் விடாப்­பி­டி­யாக ஈடு­பட்டு வரு­கிறது. இதற்­காக மக்­கள் வெளி­யேறத் தடை விதிப்­பது உள்­ளிட்ட கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அது அமல்­ப­டுத்­து­கிறது.

இத­னால் சலிப்­ப­டைந்த மக்­கள் சாலை­யில் இறங்கி போராடி வரு­கின்­ற­னர். தலை­ந­கர் பெய்­ஜிங்­கி லி­ருந்து நாடு முழு­வ­தும் ஆர்ப்­பாட்­டங்­கள் பரவி வரு­கின்­றன.

இந்த நிலை­யில் தனது நீண்­ட­கால கொவிட்-19 கொள்­கை­யில் மாற்­ற­மில்லை என்ற அறி­கு­றியை சீன அர­சாங்­கம் வெளிப்­ப­டுத்தி யிருக்­கிறது.

கம்­யூ­னி­சக் கட்­சி­யின் அதி­கா­ர­பூர்வ ஊட­க­மான பீப்­பீள்ஸ் டெய்­லி­யில் நேற்று முதல் பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டு­ரை­யில் கொவிட்-19 கொள்கை நிலைத்து இருக்­கும். அப்­படி நிலைத்து நிற் பதன் மூலமே வெற்றி கிடைக்­கும் என்று சீனா தெரி­வித்­துள்­ளது.

பிரச்­சி­னை­யைக் குறைத்து மதிப்­பி­டு­தல், அலட்­சி­யப்­ப­டுத்­து­தல் போன்ற தவ­றான அணு­கு­மு­றை­களை சரி செய்­து­கொள்ள வேண்­டும் என்­றும் ஷெங்­யின் என்­ப­வ­ரின் பெய­ரில் எழு­தப்­பட்ட ஆசி­ரி­யர் கட்­டுரை வலி­யு­றுத்­தி­யது.

இதற்­கி­டையே பெய்­ஜிங்­கில் உள்ள சிங்­ஹுவா பல்­க­லைக்கழ­கத்­தைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்­கள் கொவிட்-19 முடக்­கத்­திற்கு எதி­ராக நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டதை சமூக ஊட­கங்­களில் பர­விய காணொ­ளி­கள் வெளிச்­சம் போட்டு காட்­டின.

சிங்­ஹு­வா­வில் இரவு முழு­வ­தும் தொடர்ந்து நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டம் அரு­கில் உள்ள பீகிங் பல்­க­லைக்­க­ழ­கத்­தை­யும் தொற்றி யது. அங்­கும் எதிர்ப்­புக் கூட்­டத்­தில் மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

நாடு முழு­வ­தும் பல நக­ரங்­களில் இதேபோன்ற ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்­த­தைக் காட்­டும் காணொ­ளி­கள் சமூக ஊட­கங்­களில் பரவி வருகின்­றன.

ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பேசிய சிங்­ஹுவா மாண­வர் ஒரு­வர், பல்­க­லைக்­க­ழக உண­வ­கத்­தின் வாயி­லில் சில மாண­வர்­கள் பதா­கை­களை ஏந்தி நின்­ற­தா­க­வும் தொடர்ந்து அதிக மாண­வர்­கள் இதில் சேர்ந்­து­கொண்­ட­தா­க­வும் இப்­போது 200 முதல் 300 மாண­வர்­கள் கூடி­யி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

சீன மாணவி ஒரு­வர் வெற்­றுத் தாளை ஏந்தி நின்று கொண்­டி­ருந்­தார். இது, கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ரான அடை­யா­ளப் போராட்­ட­மாக மாறி பல மாண­வி­களும் அதில் சேர்ந்­து­கொண்­ட­னர்.

உண­வ­கத்­தின் வாயி­லில் ஏரா­ள­மான மாண­வர்­கள் கூடி­யி­ருந்த புகைப்­ப­டங்­களை சில மாண­வர்­கள் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"இது, எங்­கள் இயல்­பான வாழ்க்கை அல்ல. எங்­க­ளு­டைய வாழ்க்கை முன்­பு­போல இல்லை என்று எதிர்ப்­புக் கூட்­டங்­களில் ஒலி பெருக்கி அலறி­யது.

பெய்­ஜிங்­கில் மட்­டு­மல்­லா­மல் நான்­ஜிங் பல்­க­லைக்கழ­கத்­தி­லும் மாண­வர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். சில இடங்­களில் அதி­பர் ஸி பதவி விலக வேண்­டும் என்று வெளிப்­ப­டை­யாக மாண­வர்­கள் முழங்­கி­ய­தாக பிபிசி தக­வல் தெரி­வித்­தது. இந்த நிலை­யில் ஷாங்­கா­யில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட மாண­வர்­களை காவல்­து­றை­யி­னர் அள்­ளிச் சென்­ற­தைப் பார்த்­த­தாக பிபிசி கூறி­யுள்­ளது.

வட­மேற்கு நக­ர­மான உரும்­கி­யில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடையே தீ விபத்­தில் பத்து பேர் கொல்­லப்­பட்­ட­தால் ஆர்ப்­பாட்­டங்­கள் தீவி­ர­மா­கி­யுள்­ளது என கூறப்­ப­டு­கிறது.