ரஷ்யா குண்டுமழை; கெர்சனில் 32 பேர் பலி

ரஷ்யா குண்டுமழை; கெர்சனில் 32 பேர் பலி

2 mins read
27b0e7f7-fb27-40c1-ae8e-87e9df803c42
-

கியவ்: தெற்கு உக்­ரே­னிய வட்­டா­ர­மான கெர்­ச­னில் ரஷ்­யா­வின் குண்டு மழை­யால் 32 பேர் கொல்­லப்­பட்­ட­னர் என்று அவ்­வட்­டார காவல் துறை தெரி­வித்­தது.

இம்­மா­தம் 11ஆம் தேதி கெர்­சன் வட்­டா­ரத்­தி­லி­ருந்து ரஷ்யா தனது படையை விலக்­கிக் கொண்­ட­தால் அவ்­வட்­டாரம் மீண்­டும் உக்­ரேன் வச­மா­னது. ஏறக்­கு­றைய ஒன்­பது மாத ஆக்­கி­ர­மிப்­புக்­குப் பிறகு ரஷ்யா தனது பிடியை விட்­டுக் கொடுத்­தது.

இந்த நிலை­யில் முதல் முறை­யாக அவ்­வட்­டா­ரத்தை ரஷ்யா கடு­மை­யா­கத் தாக்­கி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தற்­போது நிப்­புரோ கிழக்­குக் கரை­யில் நிலை­கொண்­டுள்ள ரஷ்­யா­வின் படை­கள் தொடர்ந்து அந்­ந­க­ரத்­தின் மீது குண்­டு­களை வீசி வரு­கிறது.

"நாள்­தோ­றும் ரஷ்­யப் படை­கள் நகரை அழித்து வரு­கின்­றன. இதில் அப்­பாவி மக்­கள் கொல்­லப்­ப­டு­கின்­ற­னர். ஆக்­கி­ர­மிப்­புக்­குப் பிறகு அந்­ந­க­ரில் 32 பேர் உயி­ரி­ழந்­த­னர்," என்று தேசிய காவல்­துறை தலை­வர் கிலை­மென்கோ தனது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்தார்.

"நாட்­டின் காமெர் பகு­தி­யில் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள் அக­தி­க­ளாக குடி­யேறி வரு­கின்­ற­னர். அதே சம­யத்­தில் பெரும்­பா­லோர் வீட்­டில் தங்­கி­யுள்­ள­னர். அவர்­க­ளுக்கு தேவை­யான அதி­க­பட்ச பாது­காப்பை வழங்கி வரு­கி­றோம்," என்று அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே கெர்­ச­னில் மின்­சா­ரம் வழக்க நிலைக்­குத் திரும்­பி­யி­ருப்­ப­தாக அதி­ப­ரின் மூத்த உத­வி­யா­ளர் ஒரு­வர் கூ,றினார்.

கெர்­ச­னி­லி­ருந்து வசிக்க விரும்­பா­தோர் அங்­கி­ருந்து வெளி­யேற உதவி செய்­யப்­படும் என்று கடந்த வாரம் உக்­ரேன் அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது.

ரஷ்­யத் துருப்­பு­கள் மற்­றும் அவர்­க­ளு­டைய உத­வி­யா­ளர்­கள் இவ்­வட்­டா­ரத்­தில் செய்த 578க்கும் மேற்­பட்ட போர்க்குற்றங்­ களை விசா­ர­ணை­யா­ளர்­கள் பதிவு செய்­துள்­ள­னர் என்­றும் கிலை­மென்கோ தெரி­வித்­தார். ஆனால் உக்­ரே­னின் இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வரு­கிறது.