இத்தாலியின் சுற்றுலாத் தலத்தில் நிலச்சரிவு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் சுற்றுலாத் தலத்தில் நிலச்சரிவு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 mins read
c0da27ae-9a6a-4fa2-b48f-dd0a9acc1af3
இஸ்சியா தீவில் சாலைகளை மூடிய சேறு மற்றும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

காசா­மி­சி­யோலா டெர்மி (இத்­தாலி): இத்­தா­லி­யின் சுற்றுலாத் தலமான இஸ்­சியா தீவில் தொடர்ந்து பெய்த கன­ம­ழை­யால் நேற்று முன்­தி­னம் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. நேற்­றைய நில­வ­ரப்­படி இந்த நிலச்­ச­ரி­வில் கிட்­டத்­தட்ட ஒன்­பது பேர் மாண்­ட­தா­க­வும் ஐந்து பேரைக் காண­வில்லை என்றும் கூறப்­பட்­டது. நிலச்­ச­ரி­வால் பல இடங்­களில் வீடு­களும் அதன் சுற்­றுப் புறத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களும் மண்­ணுக்­குள் புதை­யுண்­டன. சில வாக­னங்­கள் கட­லுக்­குள் அடித்­துச்­செல்­லப்­பட்­டன. ஏரா­ள­மான மீட்­புப் பணி­யி­ன­ரும் தொண்­டூ­ழி­யர்­களும் மீட்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். மண் சரி­வால் சாலை­கள் சேரும் சக­தி­யு­மாக காணப்­ப­டு­கின்­றன. வாக­னப்­போக்­கு­வ­ரத்­து­களும் மின்­சார விநி­யோ­க­மும் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

தீவி­லுள்ள மலை உச்­சி­யில் இருந்து மண் கட்­டி­கள், பெருங்­கற்­கள், குப்­பைக் கூளங்­கள் ஆகி­யவை பெயர்ந்து, காசா­மி­சி­யோலா டெர்மி நக­ரில் உள்ள வீடு­கள் மீதும் சாலை­கள் மீதும் விழுந்­தன. இத­னால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அத­னை­ய­டுத்து இஸ்­சியா தீவில் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்ள புகைப்­ப­டங்­கள் மூலம், நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்ட கட்­ட­டங்­க­ளை­யும் வாக­னங்­கள் கட­லுக்­குள் தள்­ளப்­பட்ட காட்­சி­க­ளை­யும் காண­மு­டி­கிறது. அத்­து­டன் அங்­குள்ள நீர்­வீழ்ச்­சி­யில் சேறு கலந்த தண்­ணீ­ரைக் காண முடி­வ­தாக வட்­டா­ர­வாசி தெரி­வித்­தார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் கார­ண­மாக எப்­போ­தும் இல்­லாத வகை­யில் அங்கு அதிக அள­வில் மழைப்­பொ­ழிவு ஏற்­பட்­டதே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

இஸ்­சியா தீவில் ஏரா­ள­மான வீடு­கள் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கட்­டப்­பட்­டுள்­ளன.

கன­மழை, வெள்­ளம், நில­ந­டுக்­கம் போன்ற இயற்­கைச் சீற்­றங்­கள் ஏற்­ப­டும்­போது அவை தாக்­குப்­பி­டிக்­குமா என்­பது சந்­தே­கத்­தைக் கிளப்­பி­யுள்­ளது. கடந்த சில ஆண்­டு­களில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கங்­க­ளால் மலைப்­பாங்­கான இடங்­களே பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இஸ்­சி­யா­வில் சில குறிப்­பிட்ட இடங்­கள் வாழத்­த­குதி வாய்ந்­தவை அல்ல என்­பதை மக்­கள் புரிந்து நடந்­து­கொள்ள வேண்­டும். ஆபத்­தான பகு­தி­களில் சட்­ட­வி­ரோ­த­மாக கட்­டப்­பட்­டுள்ள கட்­ட­டங்­கள் இடிக்­கப்­ப­ட­வேண்­டும்," என்று கேம்­ப­னியா ஆளு­நர் வின்­சென்ஸோ டி லுகா அந்­நாட்டு தொலைக்­காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.