மீண்டும் பாகாங் மாநிலத்தின் முதலமைச்சரானார் ரோஸ்டி

மீண்டும் பாகாங் மாநிலத்தின் முதலமைச்சரானார் ரோஸ்டி

1 mins read
7e851fdf-91b0-4276-ac1b-2426c5997100
-

பெக்­கான்: பாகாங் மாநி­லத்­தின் பாரி­சான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் தலை­வர் வான் ரோஸ்டி வான் இஸ்­மா­யில், பாகாங் மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ராக இரண்­டா­வது முறை­யாக பத­வி­யேற்­றுக்­கொண்­டார்.

மூன்று கூட்­ட­ணி­க­ளுக்­கும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு போது­மான இடங்­கள் இல்லை.

எனவே பாரி­சான் நேஷனல், பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக் கட்­சி­கள் இணைந்து அங்கு அர­சாங்­கத்தை அமைக்­கின்­றன. "பக்கத்­தான் ஹரப்­பா­னு­டன் ஆன இந்­தக் கூட்­டணி உடன்­பாட்­டால் மாநி­லத்­தில் நிலைத்­தன்­மை­யை­யும் வளத்­தை­யும் கொண்­டு­வர முடி­யும்.

"அத்­து­டன் இந்த உடன்­பாடு மாநி­லத்­தின் வலு­வான பன்­மு­கத்­தன்­மை­யைப் பிர­தி­ப­லிக்­கும். மாநி­லத்­தின் வளர்ச்­சிக்­கான நிர்­வா­க­மும் திட்­ட­மி­ட­லும் தொடர்ந்து நடை­பெ­று­வதை உறுதி செய்ய இந்­தக் கூட்­டணி வழி­வ­குக்­கும் என்று கூறி­யுள்­ளார்," என்று முத­ல­மைச்­சர் ரோஸ்டி கூறி­னார்.