மலேசியாவின் கோலாலம்பூரில் இன்று மாலை கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து அங்கு பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கோலாலம்பூரின் மத்திய பகுதிகளில் உள்ள பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. கிழக்கு-மேற்கு விரைவுச்சாலையிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பல இடங்களில் மோசமான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

