குவாங்ஷோவில் மக்கள் கொதிப்பு

குவாங்ஷோவில் மக்கள் கொதிப்பு

2 mins read
63879b9e-7d36-4435-840f-53c384524827
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட தெளிவற்ற இந்தப்படத்தில் குவாங்ஷோ வட்டாரத்தில் சிலரை கைது செய்து கலவரத் தடுப்பு காவல்துறையினர் அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

குவாங்­ஷோ­வி­லும் தீவிரமான கொவிட்-19 கட்­டுப்­பாடுகளுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் வெடித்­துள்ள நிலை­யில் நாட்டைச் சீர­ழிக்­கும் விரோத சக்­தி­களை முறி­ய­டிப்­போம் என சீன கம்­யூ­னிச அர­சாங்­கம் சூளு­ரைத்­துள்­ளது.

ஷாங்­காய்: கொவிட்-19 கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளால் குவான்­ஷோ­வில் உள்ள மக்­களும் கொதிப் படைந்­துள்­ள­னர். தயா­ரிப்­புத் துறை­யின் மைய­மாக விளங்­கும் அங்கு, எதிர்ப்பு தெரி­வித்த மக்­க­ளுக்­கும் கல­வ­ரத் தடுப்பு காவல்­து­றைக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­ட­தால் பதற்­றம் அதி­க­ரித்­தது.

சீனா தனது நாட்­டில் கொவிட்-19 தொற்றை முற்­றி­லும் ஒழித்­துக் கட்ட உறுதி பூண்­டுள்­ளது. இதற்­காக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்தி வரு­கிறது.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு மேலாக நீடிக்­கும் கட்­டுப்­பா­டு­க­ளால் சலிப்­ப­டைந்த மக்­கள், ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த வார இறு­தி­யில் தலை­ந­கர் பெய்­ஜிங் உட்­பட முக்­கிய நக­ரங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

சில பல்­க­லைக் கழ­கங்­களில் வெற்­றுத்­தா­ளைக் காட்டி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட மாண­வர்­கள், கட்டுப்­பா­டு­க­ளால் வாய் பேச முடி­யா­மல் இருக்­கி­றோம் என்­பதை அடை­யா­ள­மா­கக் காட்­டி­னர்.

டுவிட்­டர் உள்­ளிட்ட சமூக ஊடகங்­களில் பதி­வான காணொளிகள், பல இடங்­களில் பதற்­ற­மான சூழல் நில­வு­வ­தைக் காட்டின.

ஒரு காணொ­ளி­யில் கைவிலங் கிடப்பட்ட மக்­களை காவல்­து­றை­யி­னர் வரி­சை­யாக அழைத்­துச் செல்­லும் காட்சி இடம்­பெற்­றுள்­ளது. ஆனால் இந்தச் சம்­ப­வம் எந்த இடத்­தில் நடந்­தது என்­பது பற்றிய விவ­ர­மில்லை.

இதற்­கி­டையே நாட்­டைச் சீர­ழிக்­கும் விரோத சக்­தி­களை முறி­ய­டிப் ­போம் என்று சட்ட அம­லாக்­கத்­துக்கு பொறுப்பு வகிக்­கும் கம்­யூ­னி­சக் கட்­சி­யின் உயர்­மட்ட அமைப்பு அறி­வித்­துள்­ளது.

தேசிய பாது­காப்பையும் சமூக நிலைத்­தன்­மையையும் கட்டிக்காக்க தயங்­கா­மல் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி அது சட்ட அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்கு உத்த­ர­ விட்­டுள்­ளது.

சமூக ஒழுங்கை சீர்­கு­லைக்­கும் சட்­ட­வி­ரோத குற்­றச் செயல்­களை இனி­யும் பொறுத்­துக் கொள்ள முடி­யாது என்று சட்ட விவ­கார மன்றத்­தின் அறிக்கை தெரி­வித்­தது.

இந்த நிலை­யில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ரான மக்­கள் ஆர்ப்­பாட்­டங்­களை நசுக்­கக் கூடாது என்று சீனா­வுக்­கான அமெ­ரிக்க தூத­ர் நிக்­கோ­லஸ் பர்ன்ஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"அமைதியாகப் போராட சீன மக்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நம்புகிறோம். தங்களுடைய சொந்த கருத்துகளைக் கொண் டிருக்க அவர்களுக்கு உரிமையிருக் கிறது. இந்த அடிப்படை உரிமைதான் உலகம் முழுவதும் இருக்கிறது. அந்த உரிமையை பறிக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.