கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் சில இடங்களில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ள உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சு, அச்சத்தில் முட்டைகளை வாங்கிக் குவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
அமைச்சு நேற்று மேற்கொண்ட சோதனையில் சில இடங்களில் முட்டைத் தட்டுப்பாடு நிலவுவது கண்டுபிடிக்கப்பட்டதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டது.
"ஆமாம், நாங்கள் சோதனை செய்ததில் உண்மையிலேயே குறிப்பாக, மாலை வேளையில் முட்டைகள் கிடைக்கவில்லை. சில கடைகள் ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் முட்டைகளை வாங்க வரம்பு விதித்துள்ளது," என்று அமைச்சின் கோலாலம்பூர் பிரிவின் இயக்குநரான அரிஃபின் சம்சுதின் தெரிவித்தார். கோலாலம்பூரில் முட்டை பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண இதர மாநிலங்களிலிருந்து கூடுதலாக உள்ள முட்டைகளை தருவிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார். கோலாலம் பூரில் போதுமான முட்டைகள் இருப் பதை உறுதி செய்வோம். ஆனால் பயத்தில் முட்டைகளை தேவைக்கு அதிகமாக வாங்க வேண்டாம் என்று கூறிய அவர், இது, நிலைமை யை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்தார். "அன்றாடத் தேவைக்கு மட்டுமே முட்டைகளை வாங்குங்கள். ஒரு டஜன் முட்டை தேவைப்பட்டால் அதற்கு மேல் வாங்காதீர்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

