வெலிங்டன்: நியூசிலாந்தில் கைப்பெட்டியில் இரு குழந்தைகளின் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்கொரியாவில் 42 வயது குழந்தைகளின் தாயார் கைது செய்யப்பட்டு ஆக்லாந்துக்கு கொண்டு வரப்பட்டார்.
குழந்தைகளின் பெயரையோ அல்லது தாயார் பற்றிய விவரங்களையோ வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை. வழக்கு விசாரணை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் தென்கொரியாவில் உள்ள துறைமுக நகரமான உல்சானில் மாதை தென்கொரிய காவல்துறை யினர் கைது செய்தனர்.
காவல்துறை வாகனத்தில் ஏற்றியபோது 'நான் செய்யவில்லை' , 'நான் செய்யவில்லை' என்று அந்த மாது கூறினார்.
பிள்ளைகளின் வயது ஐந்து முதல் பத்து வரையில் இருக்கலாம் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைவிடப்பட்ட பொருள்களை இணையம் வழியாக வாங்கிய ஒரு குடும்பம் கைப்பெட்டியில் குழந்தைகளின் சடலங்கள் இருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கைப்பெட்டியில் சடலங்கள் பல ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவிக்கிறது. கைப்பெட்டியில் இருந்த சடலங்களுக்கும் அதனை வாங்கிய குடும்பத்துக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

