ஆஸ்திரேலியாவில் ஊழலை விசாரிக்க தனி அமைப்பு

ஆஸ்திரேலியாவில் ஊழலை விசாரிக்க தனி அமைப்பு

1 mins read
5b18ee94-859f-4967-be95-40788cf7b460
தென் கொரியாவில் உள்ள உல்சான் நகரில் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட 42 வயது மாது. படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: அதி­க­ரித்து வரும் ஊழல், அவ­நம்­பிக்கை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் ஆஸ்­தி­ ரே­லிய அர­சாங்­கம், ஊழ­லுக்கு எதி­ரான சட்­டத்தை நேற்று நிறை­வேற்றியிருக்­கிறது.

இதன்­படி, அர­சி­யல்­வா­தி­களை விசா­ரிப்­ ப­தற்­கான பரந்த அதிகாரங்களைக் கொண்ட தேசிய கண்­கா­ணிப்பு அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­படும்.

ஆஸ்­தி­ரே­லியா, ஏறக்­கு­றைய ஊழ­லற்ற நாடாக இருந்­தா­லும் அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செலவு, அர­சி­ய­லில் சீனா­வின் தலை­யீடு போன்­ற பிரச்சினைகள் மக்­களை அதிருப்தியடைய செய்துள்ளது.

கொவிட்-19 காலத்­தில் பல அமைச்­சு­களில் தன்னை ரக­சி­ய­மாக நிய­மித்­துக் கொண்ட முன்­னாள் பிர­த­ம­ரான ஸ்காட் மோரி­சன் விவ­கா­ர­மும் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.

அதே நாளில் ஊழ­லுக்கு எதி­ரான சட்­ட­மும் நிறை­வே­ற்றப்பட்டது.

இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் நடை பெற்ற பொதுத்­தேர்­த­லில் மக்­கள் நம்­பிக்கை முக்­கிய விவகாரமாக உரு­வெ­டுத்­தது.

நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மசோ­தாவை அறி­மு­கப்­ப­டுத்தி பேசிய பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னிஸ், இது, மக்­க­ளின் நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­ப­தற்கு மிக­வும் முக்­கி­யம் என்­றார்.

"நேர்மை, பொறுப்பு ஏற்­பு, நம்­பிக்கை ஆகி­ய­வற்­றின் வெற்­றி­யாக இந்த மசோதா திகழ்கிறது." என்று அவர் குறிப்பிட்­டார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் 40 ஆண்­டு­கால வர­லாற்­றில் ஆகப்­பெ­ரிய சீர்­தி­ருத்­தம் இது என்­றும் அவர் வரு­ணித்­தார்.

புதிய மசோதா, அர­சி­யல்­வா­தி­களை தேசிய நாடா­ளு­மன்­றத்­தில் விசா­ரிக்க வகை செய்­கிறது. 2023ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் ஊழல் விசா­ரணை அமைப்பு உரு­வா­கும் என எதிர் பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பெரும்­பா­லான மாநி­லங்­களில் இதே போன்ற ஊழல் விசா­ரணை அமைப்­பு­கள் உள்­ளூர் அள­வில் செயல்­ப­டு­கின்­றன.