சாபா பெர்சத்துக் கட்சி தொடரும்: முகைதீன்

சாபா பெர்சத்துக் கட்சி தொடரும்: முகைதீன்

1 mins read
30c4b7a5-00c0-48e5-8d22-8ccae84c39f2
-

கோத்தா கின­பாலு: சாபா பெர்­சத்­துக் கட்சி தொடர்ந்து இருக்­கும் என்று பெர்­சத்­துக் கட்­சி­யின் தலை­வ­ரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான முகை­தீன் யாசின் நேற்று தெரி­வித்­தார்.

பிர­தான பெர்­சத்­துக் கட்­சியிலி­ருந்து சாபா பெர்­சத்­துக் கட்சி வில­கி­விட்­ட­தாக நேற்று முன்­தி­னம் சாபா பெர்­சத்­துக் கட்­சி­யின் தலை­வ­ரும் சாபா மாநில முதல்­வ­ரு­மான ஹாஜிஜி நூர் அறி­வித்­ததாக தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து சாபா பெர்­சத்­துக் கட்சி தொடர்ந்து செயல்­படும் என்று முகை­தீன் யாசின் கூறி­யுள்­ளார்.

"ஹாஜி­ஜி­யும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் பிர­தான கட்­சியி லிருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தா­லும் சாபா பெர்­சத்து தொடர்ந்து இருக்கும்," என்று பிர­தான பெர்­சத்­துக் கட்சி வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

மாநி­லத் தலை­வர்­கள், கிளை­க­ளின் தலை­வர்­கள் கட்­சி­யின் தலை­மை­யால் நிய­மிக்­கப்படு கின்­ற­னர். அதனை மாற்­றும் அதி­கா­ரம் கட்சி உச்­ச­மன்­றத்­துக்கே உள்­ளது என்று திரு முகை­தீன் குறிப்பிட்டார்.

சாபா பெர்­சத்து இனி பெலு­ரான் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரோனால்ட் கியன்டி தலை­மை­யில் இயங்­கும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.