பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் நடந்த தாக்குதலில் மாண்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த அச்சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் மாண்டனர். இரண்டு இளம் காவல்துறை அதிகாரிகளும் கொலையாளிகளின் அண்டைவீட்டுக்காரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
வியம்பிலா எனும் ஒதுக்குபுற இடத்தில் உள்ள வீட்டில் கேரத் டிரேன்ஸ் என்பவரைக் காணவில்லை என்ற புகாரை விசாரிக்கக் காவல்துறையினர் சென்றிருந்தனர். ஆனால் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியரான டிரேன்ஸ், அவரது மனைவி மற்றும் சகோதரர் மூவரும் திட்டமிட்டு, அங்குச் சென்ற அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். மேலும் இரு காவல்துறை அதிகாரிகள் காயங்களுடன் தப்பினர். பல மணி நேரம் நீடித்த நடவடிக்கைக்குப் பின்னர் கொலையாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதப் போக்குடைய டிரேன்ஸ், ஆஸ்திரேலிய காவல்துறை தம்மைப் போன்றவர்களைக் குறிவைப்பதாகவும் வேவு பார்ப்பதாகவும் கருதினார்.

