அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: முகக்கவசம் அணிய வேண்டிய காலம் திரும்பிவிட்டது. இம்முறை கொவிட்-19 தொற்றுக்கிருமி மட்டுமல்லாமல், கொரோனா கிருமி, சளிக்காய்ச்சல், ஆர்எஸ்வி என்று குறிப்பிடப்படும் சுவாச தொற்றுப் பிரச்சினை ஆகிய மூன்றும் நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சலஸ் உட்பட அமெரிக்கா முழுவதும் பரவு கிறது என்று அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் உட்புறம் மற்றும் வெளியிடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினர்.
நாடு முழுவதும் கொவிட்-19 தொடர்பான சம்பவங்கள் 56 விழுக் காடும் மருத்துவமனை நோயாளிகள் சேர்ப்பு எண்ணிக்கை 24% கூடியது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 13 மில்லியன் பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். தற்போதைய சளிக்காய்ச்சல் காலகட்டத்தில் 7,300 பேர் இறந்துள்ளனர் என்று சிடிசி எனும் நோய்க்கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்கள் மதிப்பிட்டுள்ளன.
வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்எஸ்வி பாதிப்பு குறைந்து இருந்தாலும் தொற்று விகிதம் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நிலவரத்தைக் கருத்தில்கொண்டு முகக் கவசம் அணிய வேண்டும் என்று நகரத்துக்கு நகரம் 'சிடிசி' அதிகாரபூர்வமாக ஆலோசனை வழங்கி உள்ளது.
கிருமிப் பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை, தொற்றுச் சம்பவங்களின் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
"சிடிசியின் ஆலோசனைக்காகக் காத்திருக்க தேவையில்லை. முகக்ககவசம் அணிய வேண்டும்," என்று அண்மைய பேட்டியில் சிடிசியின் இயக்குநர் ரோசெல் வெலென்ஸ்கி தெரிவித்தார்.
கொவிட்-19, சளிக்காய்ச்சல், ஆர்எஸ்வி ஆகிய மூன்றும் நாட்டின் சில பகுதிகளில் தீவிரமாகவும் சில இடங்களில் மிதமாகவும் இருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் கிருமித் தொற்று பரவியிருக்கிறது என்று வான்டெர் பில்ட் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளியின் தடுப்பு மருந்து பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஷஃபிங்கர் கூறினார்.
கிருமித்தொற்று ஆபத்து அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பணி பெண்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் போன்றோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சியாட்டிலில் உள்ள யுடபிள்யூ மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய், ஒவ்வாமை பிரிவின் இணைப் பேராசிரியரான டாக்டர் ஹெலன் சூ, தொற்று மற்றும் மருத்துவமனை நோளாளி சேர்ப்பு விகிதம் கூடி இருப்பதால் அனைவரும் முகமூடி அணிய பரிந்துரைத்துள்ளார்.
"ஆர்எஸ்வி மற்றும் சளிக் காய்ச்சலால் மருத்துவமனை படுக் கைகள் நிரம்பிவழிகின்றன. இந்த நேரத்தில் தொற்றுக்கிருமி பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவதே சிறந்தவழி என்று அவர் கூறியுள்ளார்.

