சீனாவில் தொற்று அதிகரிப்பு; வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள்

சீனாவில் தொற்று அதிகரிப்பு; வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள்

2 mins read
20c06dce-f1d7-484c-808a-1c535c851fc2
-

பெய்­ஜிங்: சீனா, தனது நாட்­டி­லி­ருந்து கொவிட்-19 தொற்­றுக்­கி­ரு­மியை முற்­றி­லும் ஒழித்­துக்கட்டும் கொள்­கை­யைப் பின்­பற்றி கடு­மை­யா­னக் கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­தி­யது. ஆனால் மக்­கள் எதிர்ப்பு கிளம்­பி­ய­தால் அதி­லி­ருந்து பின்­வாங்­கிய அர­சாங்­கம் பல தளர்­வு­களை அறி­வித்­து வருகிறது.

இந்த நிலை­யில் சீனாவில் தொற்­றுச் சம்­ப­வங்கள் அதிகரித்து வருவதால் அர­சாங்க நிகழ்­வு­க­ள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மக்­களும் வீட்­டில் முடங்­கிக் கிடக்­கின்­ற­னர்.

நவம்­பர் மாதத்­திற்­கான முக்­கிய பொரு­ளி­யல் குறி­யீ­டு­களை வெளி­யி­டும் மாதாந்­திர செய்­தி­யா­ளர் கூட்­டம் இன்று நடை­பெறு ­வ­தாக இருந்­தது. அதுவும் ரத்து செய்­யப் ­ப­டு­வ­தாக நேற்று தேசிய புள்­ளி­யி­யல் பிரிவு தெரி­வித்­தது.

மத்­திய பொரு­ளி­யல் குழு­வின் கூட்­டத்­தில் வரு­ம் ஆண்­டுக்­கான பொரு­ளி­யல் இலக்­கு­களை அதி­கா­ரி­கள் வெளி­யி­டு­வது வழக்­கம்.

மேலும் முதி­யோர்­களில் குறை­வா­ன­வர்­களே தடுப்­பூசி போட்­டுள்ள நிலை­யில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை அந்­நாட்டு அர­சாங்­கம் அதி­ர­டி­யா­கத் தளர்த்­தி­யி­ருக்­கிறது.

இத­னால் பொரு­ளி­யல் பாதிக்­க­ப­டக் கூடும் என்ற கவலை எழுந்­துள்­ளது. 'காய்ச்­சல்' என்ற வார்த்­தையை இணை­யத்­தில் பலர் தேடி­யி­ருப்­ப­தாக தர­வு­கள் காட்­டு­கின்றன. சுரங்­கப்பாதை பய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைந்துள்ளது.

இதை வைத்­துப் பார்க்­கும்­போது தலை­ ந­கர் பெய்­ஜிங்­கில் கிரு­மிப்­ப­ர­வல் மோச­மாக இருக்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

பெய்­ஜிங்­கில் பல ஊழி­யர்­க­ளுக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ள­தால் உண­வ­கங்­கள் மூடி கிடக்­கின்­றன. சாலை­களில் ஸ்கூட்­ட­ரில் பறந்து செல்லும் உணவு விநி­யோ­கிப்­பா­ளர்­கள் ஏறக்­கு­றைய காணா­மல் போயுள்­ள­னர்.

மருந்­துக் கடை­களில் சளிக்­காய்ச்­சல் மருந்து தீர்ந்­து­விட்­டது. பேரங்­கா­டி­களில் கிரு­மித் தெளிப்­பான் போன்ற அத்­தி­யா­வ­சி­ய­மான பொருள்­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

"யாருக்­கும் வெளியே வர மன தைரி­ய­மில்லை," என்று பெய்­ஜிங் உண­வக உரி­மை­யா­ள­ரான யுவே ஜியா­ஜன் தெரி­வித்­தார்.

கடந்த வாரம் உட்­பு­றங்­களில் உணவு உண்ண வாடிக்­கை­யா­ளர் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். ஏரா­ள­மான வாடிக்­கை­யா­ளர்­கள் உண­வ­கத்­திற்கு வரு­வார்­கள் என இவர் கொண்­டாடி மகிழ்ந்தார். ஆனால் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தால் மக்­கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்;

"உணவைப் பொட்­ட­லா­மாக வாங்­கிச் செல்­லக்­கூட ஆளில்லை" என்று திரு யுவே தெரி­வித்­தார். வெய்போ சமூக ஊடகத்தில் தன்னுடைய உறவினர், நண்பர்களில் 50 முதல் 60 விழுக்காட்டினருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பெய்ஜிங்கில் மட்டும் 559 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.