பெரிக்காத்தான் நேஷனலில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்

பெரிக்காத்தான் நேஷனலில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்

1 mins read
8b24f599-79cc-482c-9aa2-cdf764de6d05
-

கோலாலம்பூர்: மலேசியாவின் ஒரே ஆகப்பெரிய எதிர்க்கட்சியான பெரி காத்தான் நேஷனலின் தலைவர் முகை தீன் யாசினை ஓரங்கட்டும் விதமாக புதிய தலைவர்களை முன்னிறுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் முகைதீன் யாசின் தலைமையில் அக்கூட்டணி போட்டியிட்டு அன்வர் இப்ராஹிமின் கூட்டணிக்கு அடுத்ததாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் கூடும்போது அதன் பொதுச் செயலாளர் ஹம்சா ஸைனுதீன் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை வகிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டு மல்லாமல் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுதின் ஹாசன், பெரிக் காத்தான் நேஷனலின் 74 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொறடாவாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம், வரு­கின்ற நாடா­ளு­மன்றக் கூட்­டத்­தில் நடக்­கும் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெறு­வோம் என்று கூறி­யுள்­ளார்.

அனைத்­தும் நல்­ல­வி­த­மாக நடக்க பிரார்த்­தனை செய்­யுங்­கள் என்­று அவர் கேட்­டுக்கொண்­டார்.