பிரிட்டனில் மாபெரும் தாதியர் போராட்டம்

பிரிட்டனில் மாபெரும் தாதியர் போராட்டம்

2 mins read
4cf4e00a-fe3e-491c-9a71-a2abb45d831a
-

லண்­டன்: பிரிட்­ட­னில் தேசிய சுகா­தா­ரச் சேவைத் துறை­யைச் சேர்ந்த தாதி­யர்­கள் முதன்­மு­த­லாக தேசிய அள­வில் மாபெ­ரும் வேலை­நி­றுத்­தத்­தைத் தொடங்­கியுள்ளனர். 106 ஆண்­டு­களில் இல்­லா­த­வ­கை­யில் இந்­தப் போராட்­டம் வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தா­கக் கரு­தப்­படு­கிறது.

அர­சாங்­கத்­து­ட­னான கசப்­பு­ணர்வு மற்­றும் ஊதி­யம் ஆகிய பிரச்­சி­னை­களே இந்­தப் போராட்­டம் வெடிக்­கக்­கா­ர­ணம். ஏற்­கெ­னவே நோயா­ளி­களை சரி­வ­ரக் கவ­னிக்க முடி­யாத நெருக்­க­டியை மருத்­து­வ­ம­னை­கள் சந்­தித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் இந்த ஆண்­டின் பர­ப­ரப்­பான இக்­கா­ல­கட்­டத்­தில் தாதி­யர்­கள் போராட்­டத்­தில் குதித்­துள்­ள­தால் நோயா­ளி­க­ளைக் கவ­னிப்­ப­தில் மருத்­து­வ­ம­னை­கள் மேலும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றன.

அங்­குள்ள 76 தேசிய மருத்­து­வ­ம­னை­கள் மற்­றும் சுகா­தார நிலை­யங்­களில் இருந்து கிட்­டத்­தட்ட 100,000 தாதி­யர்­கள் வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­ப­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக சிகிச்­சைக்­காக வர­வி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான வெளி­நோ­யா­ளி­க­ளின் முன்­ப­தி­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போல் ஏரா­ள­மான அறுவை சிகிச்­சை­களும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

பிரிட்­ட­னில் அண்­மை­யில் அரங்­கேறி வரும் வேலை நிறுத்­தங்­க­ளால் தொழிற்­சாலை, அஞ்­ச­ல­கத்­துறை, ரயில்வே துறை, விமா­னத்­துறை என பல­து­றை­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வே­ளை­யில் தாதி­யர்­க­ளின் வேலை நிறுத்­தம் அர­சாங்­கத்தை மேலும் இக்­கட்­டில் தள்­ளி­யுள்­ளது.

பிரிட்­ட­னில் பண­வீக்­கம் 10 விழுக்­காட்­டைத் தாண்­டி­யுள்­ளது. அத­னால் ஊழி­யர்­க­ளுக்கு அதிக ஊதிய உயர்வு அளிக்க முடி­யா­மல் தொழில்து­றை­களும் அர­சாங்­கத்­துறை­களும் திணறி வரு­கின்­றன. இது அங்­குள்ள தொழிற்­சங்­கங்­க­ளுக்­கும் முத­லா­ளி­க­ளுக்­கும் இடையே பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அண்­மை­யில் போராட்­டங்­கள் பல வெடித்­தா­லும் இப்­போது வெடித்­துள்ள தாதி­யர்­கள் போராட்­டமே அங்கு பெரி­ய­ள­வில் பேசப்­படு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"தொழிற்­சங்க ஊழி­யர்­கள் இது­போன்ற வேலை­நி­றுத்­தங்­களில் ஈடு­ப­டு­வது ஆழ்ந்த கவ­லை­யைத் தரு­கிறது. பணி­யா­ளர்­க­ளின் தேவையை உறு­தி­செய்ய நான் பொதுத்­து­றை­யி­ன­ரி­ட­மும் தனி­யார் மருத்­து­வர்­க­ளி­ட­மும் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றேன். அதே­நேரத்­தில் தாதி­யர்­க­ளின் வேலை நிறுத்­தத்­தில் நோயா­ளி­க­ளின் உயி­ருக்கு ஆபத்து நேரக்­கூ­டும் என்று கவ­லைப்­ப­டு­கி­றேன்.

"அவ­சர மருத்­துவ சிகிச்­சைக்­கான நோயா­ளி­களும் முக்­கி­ய­மான சிகிச்­சை­க­ளுக்கு முன்­ப­திவு செய்­த­வர்­களும் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் சென்று சிகிச்சை பெற­லாம்," என்று அமைச்­சர் ஸ்டீவ் தெரி­வித்­தார். பாது­காப்­பற்ற நிலை­யி­லான நோயா­ளிக் கவ­னிப்பு, ஊழி­யர் பற்­றாக்­குறை, குறைந்த ஊதி­யம் ஆகி­ய­வற்­றால் தாதி­யர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தங்­க­ளுக்கு 19 விழுக்­காடு ஊதிய உயர்வு அளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக தாதி­யர்­கள் இந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். ஆனால் அர­சாங்­கமோ சம்­பள உயர்­வைப் பற்­றிப் பேச மறுத்­து­வ­ரு­கிறது.

தாதி­யர்­க­ளுக்கு நான்கு முதல் ஐந்து விழுக்­காட்­டுக்கு மேல் சம்­பள உயர்வு அளிப்­பது சாத்­தி­ய­மல்ல என்று அர­சாங்­கம் கூறி­வ­ரு­கிறது. தாதி­யர் போராட்­டத்­திற்கு முந்­தைய கருத்­துக்­க­ணிப்­பில் அதி­க­மா­னோர் இந்­தப் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.