மலேசியா: அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட வாரியத் தலைவர்கள் நீக்கம்

மலேசியா: அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட வாரியத் தலைவர்கள் நீக்கம்

1 mins read
778fd18f-9cb8-4a63-88ff-600a987e0ee2
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அர­சாங்­கம் சார்ந்த நிறு­வ­னங்­கள், சட்­ட­பூர்வ அமைப்­பு­கள், வாரி­யங்­கள், மாநில முத­லீட்டு நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றிற்கு அர­சி­யல் ரீதி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தலை­வர்­க­ளை­யும் அவற்­றின் உறுப்­பி­னர்­க­ளை­யும் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் நிர்­வா­கம் நீக்­கி­யுள்­ளது.

இந்­தத் தக­வலை மத்­திய அர­சாங்­கத்­தின் அதி­காரி ஒரு­வர், 'மலே மெயில்' இணைய இத­ழி­டம் தெரி­வித்­த­தா­க ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன. பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் தேர்­தல் வாக்­கு­று­தி­யின்­படி இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதாகப் பார்க்கப்படுகிறது.

இருப்­பி­னும் இது அக்கூட்டணி, தனது ஆத­ர­வுக் கட்­சி­க­ளின் வெறுப்பை சம்­பா­திக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

அர­சாங்­கம் சார்ந்த அமைப்­பு­களில் இயக்­கு­நர் மற்­றும் தலை­வர் பத­வி­கள் பெரும்­பா­லும் அர­சி­யல் ரீதி­யாக விசு­வா­சத்­தின் அடிப்­ப­டை­யில் அளிக்­கப்­படும். இது பெரும்­பா­லும் பாரி­சான் நேஷ­னல் ஆட்­சி­யின் நீண்­ட­கால கலாசா­ர­மா­க இருந்து வந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஜன­நா­ய­கம் மற்­றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான உள்­ளூர் சிந்­த­னைக் குழு­மம் முன்பு அர­சி­யல் ரீதி­யாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது குறித்து எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது. 2021 ஆகஸ்ட் முதல் 2022 செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் மட்­டும் 230 பேர் இது­போன்ற பத­வி­களில் நிய­மிக்­கப்­பட்­ட­னர்.