தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மங்கோலிய அழகி கொலை: S$1.53 மி. இழப்பீடு ஆணை

2 mins read
93d0e584-5401-4217-b464-fb73107dc298
-

அரசாங்கம், இதர மூவருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கடந்த 2006ஆம் ஆண்­டில் அல்­டான்டுயா ஷரிபு என்ற மங்­கோ­லி­யா­வைச் சேர்ந்த விளம்­பர அழகி ஒரு­வர் கொலை செய்­யப்­பட்­டார். அவ­ரின் குடும்­பத்­திற்கு இழப்­பீ­டாக 5 மில்­லி­யன் ரிங்­கிட் (S$1.53 மில்­லி­யன்) கொடுக்­கும்­படி மலே­சிய அர­சாங்­கத்­திற்­கும் இதர மூன்று பேருக்­கும் மலே­சிய உயர்­ நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்டு இருக்­கிறது.

அர­சாங்­கத்­திற்­கும் அர­சி­யல் பகுப்­பாய்­வா­ளர் அப்­துல் ரசாக் பகிந்தா, முன்­னாள் காவல்­துறை அதி­கா­ரி­க­ளான சைருல் அஸார் உமர், அஸிலா ஹாட்ரி ஆகிய மூன்று பேருக்­கும் எதி­ராக அந்த அழ­கி­யின் குடும்­பத்­தி­னர் வெற்றி கர­மான முறை­யில் தங்­க­ளு­டைய சாட்­சி­யங்­களை மெய்ப்­பித்து இருக்­கி­றார்­கள் என்று உயர் நீதி­மன்ற நீதி­பதி வாஸிர் அலாம் மைதீன் மீரா நேற்று தீர்ப்­ப­ளித்­தார்.

இந்­தக் கொலை சம்­ப­வம் தொடர்­பில் 2007ல் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன. 15 ஆண்­டு­கள் கழித்து இப்­போது தீர்ப்பு வெளி­யாகி இருக்­கிறது.

இழப்பீட்டு வழக்கு விசா­ரணை 2019ல் தொடங்­கி­யது. வாதித் தரப்­பில் மொத்­தம் 26 பேர் சாட்­சி­யம் அளித்­த­னர். அரசு சார்பில் மூன்று சாட்சிகள் முன்னிலையானார்கள். அப்துல் ரசாக் சாட்சியம் அளிக்க மறுத்துவிட்டார்.

மங்­கோ­லிய அழகி 2006 அக்­டோ­பர் மாதம் கொலை செய்­யப்­பட்­டார். அவ­ரு­டைய உடல் ராணுவம் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அள­வி­லான வெடி­ம­ருந்­து­க­ளைக் கொண்டு தகர்க்­கப்­பட்­டது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் காவல்­துறை அதி­கா­ரி­க­ளான சைருல் அஸார் உமர், அஸிலா ஹாட்ரி ஆகிய இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அவர்­க­ளுக்கு 2009ல் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மலேசியாவில் நஜிப் ரசாக் துணைப் பிரதமராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக அப்துல் ரசாக் என்பவர் இருந்தார். இவர் அந்தக் கொலையில் குற்றவாளிகள் இருவருக்கும் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப் பட்டது. ஆனால், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்த அழ­கி­யின் பெற்­றோ­ரும் அவர்­க­ளின் பேரப்­பிள்­ளை­கள் மூன்று பேரும் இழப்­பீடு கேட்டு 2007 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி விண்­ணப்­பித்து இருந்­த­னர்.

பிறகு பேரப்­பிள்­ளை­களில் ஒருவர் 2017ல் மரண மடைந்­த­விட்­ட­தால் வாதிகளின் பெயர் பட்­டியலில் இருந்து அவர் பெயர் நீக்­கப்­பட்­டது.