ராட்சத வளர்ப்பு மீன் தொட்டி உடைந்து வீதியில் தண்ணீர்

ராட்சத வளர்ப்பு மீன் தொட்டி உடைந்து வீதியில் தண்ணீர்

1 mins read
eacf649b-106f-41ed-9420-d3dd68fe5886
-

பெர்­லின்: ஜெர்­ம­னி­யின் பெர்­லின் நக­ரில் உள்ள ராடிஸ்­சன் புளூ ஹோட்­டல் என்ற கட்­டடத்­தில் உள்ள 14 மீட்­டர் உயர வளர்ப்பு மீன் கண்­ணாடித் தொட்டி உடைந்­து­தண்­ணீர் வீதி­வரை வழிந்து ஓடி­ய­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

தொட்டி உடைந்து தண்­ணீர் வெளியாவ­தாக தீண­யைப்­புப்­படை டுவிட்­ட­ரில் தெரிவித்­தது. சாலை­யில் அதிக அளவு தண்­ணீர் ஓடி­ய­தாக போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கம் கூறி­யது. அந்­தச் சம்­ப­வத்­தில் இருவர் காயம் அடைந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

உருளை வடி­வி­லான அந்­தத் தொட்­டி­யில் ஒரு மில்­லியன் லிட்­ட­ருக்­கும் அதிக தண்­ணீர் இருந்­தது. சுமார் 1,500 வெப்ப மண்­டல மீன்­கள் வளர்க்­கப்­பட்­டன.

அதன் நடுவே கண்­ணா­டிக் கூண்டு ஒன்று மின்­தூக்கி போல் மேலும் கீழும் போய்­வ­ரும். அதில் சென்று பார்வையாளர்­கள் மீன்களை ரசிக்­க­லாம்.

படங்கள்: டுவிட்டர்