'பெரும்பான்மை இருந்தால் ஐக்கிய அரசு தேவையில்லை'

'பெரும்பான்மை இருந்தால் ஐக்கிய அரசு தேவையில்லை'

2 mins read
e6256365-9a19-4be1-829b-abbffa8c946f
-

பாகோ: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் கூறு­வ­து­போல மூன்­றில் இரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு அவ­ருக்கு இருந்­தால் ஐக்­கிய அர­சாங்­கத்­துக்­கான தேவையே இல்லை என்று பெரிக்­காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் தலை­வர் முகை­தீன் யாசின் தெரி­வித்­துள்­ளார்.

பதவி பறிக்­கப்­படும் அபா­யம் ஏதும் இல்­லா­மல் தங்­கள் கருத்­து­க­ளைச் சுதந்­தி­ர­மாக முன்­வைக்­கக்­கூ­டிய உரி­மை­யும் நிலை­யும் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இருக்க வேண்­டும் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

பல கட்­சி­க­ளைக் கொண்ட கூட்­டணி அர­சாங்­கத்­துக்­குத் தலைமை வகித்து அன்­வார் பிர­த­மர் பதவி வகித்து வரு­கி­றார். அவ­ருக்கு பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இருக்­கி­றதா என்­பதை உறுதி செய்ய நாளை மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­கிறது.

"நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­பதை நிரூ­பிப்­ப­தில் அன்­வா­ருக்கு அவ்­வ­ள­வாக நம்­பிக்கை இல்லை எனத் தோன்­று­கிறது.

"அவ­ருக்கு 148 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு அளிப்­ப­தாக எனக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. இது மூன்­றில் இரண்டு பங்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­

க­ளுக்­கும் அதி­கம்.

"தம்மை ஆத­ரிப்­ப­வர்­களை அன்­வார் நம்ப வேண்­டும். தேவை­யில்லா நிபந்­த­னை­க­ளால் அவர்­க­ளுக்கு நெருக்­கு­தல் தரக்­கூ­டாது.

"அன்­வா­ரைப் பிர­த­ம­ராக ஏற்­கா­மல் அவ­ருக்கு ஆத­ரவு தராத நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பதவி விலக வேண்­டும் என்று முன்­வைக்­கப்­படும் நிபந்­தனை அர­ச­மைப்­புச் சட்­டத்­தக்கு எதி­ரா­னது.

இத்­த­கைய சட்­டங்­கள் குறித்து நான் கேள்­விப்­பட்­டதே இல்லை. கட்சி தாவு­வ­தற்கு எதி­ரான சட்­ட­மாக இருந்­தால் பர­வா­யில்லை. ஆனால் இது கட்சி தாவு­வ­தற்கு எதி­ரான சட்­டத்­து­டன் தொடர்­பு­டை­ய­தல்ல," என்று தமது தொகுதி ­யான பாகோ­வில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்ட திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

திரு அன்­வார் போடும் இத்­

த­கைய உடன்­பா­டு­கள் அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்கு எதி­ரா­னது என்­றும் சட்­ட­வி­ரோ­த­மா­னது என்­றும் சிலர் கரு­து­வ­தாக திரு முகை­தீன் கூறி­னார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கச் சொல்­வ­தற்­குப் பதி­லாக ஒழுங்குமுறை நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­லாம்.

இதற்­கி­டையே, நாளை நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு குறித்து பெரிக்­காத்­தான் நேஷ­னல் கூட்­டணி இன்று கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

அன்­வா­ருக்கு ஆத­ரவு தரப்­போ­வ­தில்லை என்­ப­தில் பெரிக்­காத்­தான் நேஷ­னல் உறு­தி­யாக இருப்­ப­தாக திரு முகை­தீன் கூறி­னார். இருப்­பி­னும், இது­கு­றித்து தீவி­ர­மா­கக் கலந்­து­ரை­யா­டப்­படும் என்­றார் அவர்.

மலே­சி­யா­வின் ஐக்­கிய அர­சாங்­கத்­தில் பக்­கத்­தான் ஹரப்­பான், தேசிய முன்­னணி, கபுங்­கான் சர­வாக் கட்சி, கபுங்­கான் சர­வாக் மக்­கள் கட்சி, வாரி­சான் கட்சி ஆகி­யவை இடம்­பெ­று­கின்­றன.

நிலைத்­தன்­மை­மிக்க தலை­மைத்­து­வத்தை உறுதி செய்ய இவை உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. எவ்­வித நிலை­யற்­ற­தன்­மை­யும் இன்றி ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிர­த­மர் பதவி வகித்து தமது பணி­க­ளைச் செய்து முடிக்க இந்த ஏற்­பாடு வழி­வ­குக்­கும் என்று திரு அன்­வார் தெரி­வித்­துள்­ளார்.