பெட்டாலிங் ஜெயா: பெஜுவான் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து டாக்டர் மகாதீர் முகம்மது விலகியுள்ளார். அவரது பதவி விலகல் கடிதத்தை பெஜுவான் கட்சி ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியைச் சேர்ந்தவரும் டாக்டர் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீர் நேற்று தெரிவித்தார்.
"அவரது சேவைக்கும், வழிகாட்டுதலுக்கும், அறிவுத்திறனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எங்களுக்கு ஆற்றிய சேவை
களுக்கு இறைவனால் மட்டுமே தகுந்த வெகுமதியை அவருக்குத் தர முடியும்," என்றார் முக்ரிஸ்.
சமயம், இனம், நாடு ஆகியவற்றுக்காக டாக்டர் மகாதீர் தொடங்கிய போராட்டத்தை பெஜுவான் கட்சி தொடரும் என்று அவர் உறுதி அளித்தார்.
டாக்டர் மகாதீரின் கொள்கைகள், தலைமைத்துவ முறை ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்க்க பெஜுவான் கட்சி பாடுபடும் என்று முக்ரிஸ் கூறினார்.
தலைவர் கட்சியிலிருந்து டாக்டர் மகாதீர் விலகியுள்ளபோதிலும் பெஜுவான் கட்சியின் உறுப்பினராக அவர் தொடர்கிறார் என முக்ரிஸ் தெரிவித்தார்.

