நியூயார்க்: அமெரிக்காவில் மிக மோசமான சளிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சளிக்காய்ச்சல் போன்ற நோய்களால் அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பும் ஒன்று. ஏதிர்பார்க்கப்பட்டதைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே நோய் பரவல் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவாசப் பிரச்சினையை விளைவிக்கும் கிருமியால் சிறுவர்கள் பலர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனைகளில் அனு
மதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்ஃபுளுவென்சா எனப்படும் சளிக்காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு பொதுவாக அமெரிக்காவில் பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டும். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் இல்லாத அளவில் அந்நோய் காரணமாக அமெரிக்காவில் பலர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும் இது மிஞ்சிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று அமெரிக்காவில் குறைந்துள்ளபோதிலும் அது படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே நிலைகுலைந்திருக்கும் அமெரிக்க சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு கொவிட்-19, சளிக்காய்ச்சல், சுவாச நோய் ஆகியவை ஒருசேர நெருக்குதல் அளிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

