பாத்தாங் காலி நிலச்சரிவு: தேடுதல் பணிகள் தொடர்கின்றன

1 mins read
248da297-71e1-46f4-bee0-092d89bf32ef
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் பாத்­தாங் காலி நக­ரில் இம்­மா­தம் 16ஆம் தேதி ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் இது­வரை 24 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

மாண்­ட 24 பேரும் அடை­யா­ளம் காணப்­பட்­டு­விட்­ட­தாக மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே. மண்­ணுக்கு அடி­யில் இன்­னும் ஒன்­பது பேர் சிக்கி இருக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­

ப­டு­கிறது.

மழை பெய்து சேறும் சக­தி­யு­மாக இருந்­த­போ­தி­லும் அவர்­க­ளைத் தேடும் பணி­கள் நேற்று தொடர்ந்­தன.

நிலச்­ச­ரிவு ஏற்­பட்ட இடத்­துக்கு அரு­கில் மோப்ப நாய்­க­ளின்

உத­வி­யோடு தேடு­தல் பணி­கள் கடந்த சில நாள்­க­ளாக நடை­பெற்­றன.

இந்­நி­லை­யில், தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த எட்டு மோப்ப நாய்­க­ளைக் கொண்ட கே9 பிரி­வுக்கு நேற்று ஓய்வு அளிக்­கப்­பட்­டது. தமது தந்­தை­யைக் காண­வில்லை என்று கூறிக்­கொண்ட ஆட­வர் ஒரு­வர் தமது மூன்று குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் நேற்று மீட்­புப் படை­யி­ன­ரின் முகா­முக்­குச் சென்­ற­தாக தி ஸ்டார் நாளி­தழ் தெரி­வித்­தது.