இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு முகாம் மீது அந்நாட்டைச் சேர்ந்த தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தி அதைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முகாமில் இருந்தோரைப் போராளிகள் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.
அவர்களை விடுவிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் தலிபான் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கிட்டத்தட்ட 20 தலிபான் போராளிகளின் பிடியில் இருக்கும் முகாமைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அவ்விடத்துக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்குத் தப்பிச் செல்ல பாதுகாப்பான வழி அமைத்துத் தருமாறு தலிபான் போராளிகள் கேட்டுக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராளிகள் தாக்கியதில் குறைந்தது ஒரு ராணுவ அதிகாரி மாண்டதாக நம்பப்படுகிறது.

