லண்டன்: சம்பள உயர்வு கேட்டு பிரிட்டனைச் சேர்ந்த தாதியர் நேற்று மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாதியர் தொடர்ந்து வேலை
நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டால் அது நோயாளிகளின் பாதுகாப்பை வெகுவாகப் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டும் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இங்கிலாந்து, வேல்ஸ், வட
அயர்லாந்து ஆகிய நாடுளில் உள்ள ராயல் தாதிமைக் கல்லூரியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100,000 தாதியர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்பு கடந்த வியாழக்கிழமையன்று அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 106 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவே அந்த தொழிற்சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகும்.
சம்பள உயர்வு வேண்டும் என்று தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் தாதியர்.
படம்: ராய்ட்டர்ஸ்

