பல அமைப்புகள் கலைப்பு

பல அமைப்புகள் கலைப்பு

2 mins read
792698c6-e847-4b35-a202-d35c2fa6dccf
-

புத்­ர­ஜெயா: மலே­சி­யா­வில் 'என்­ஆர்சி' எனும் தேசிய மீட்பு நிலை­யம் உள்­ளிட்ட உட்­பட பல அர­சாங்க அமைப்­பு­க­ளைப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம் கலைத்­துள்­ளார். தேசிய மீட்பு நிலை­யம் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசி­னின் தலை­மை­யில் இயங்­கிய அமைப்பு.

கலைக்­கப்­பட்ட அமைப்­பு­கள் இப்­போது தேவைப்­ப­டா­த­தால் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக திரு அன்­வார் தெரி­வித்­தார்.

"இதர அமைப்­பு­கள் மேற்­கொள்­ளும் அதே பணி­கள் சில­வற்றை தேசிய மீட்பு நிலை­ய­மும் மேற்­கொண்­டு­வந்­த­தால் அது கலைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த கால­கட்­டத்­தில் இருந்த தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யவே அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது," என்று நேற்று நடை­பெற்ற அமைச்­சர்­கள் சந்­திப்­பில் திரு அன்­வார் கூறி­னார். சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் தேசிய மீட்பு அமைப்­பின் தலை­வ­ரா­கத் திரு முகை­தீன் நிய­மிக்­கப்­பட்­டார்.

ஒரே பணி­களை மேற்­கொள்­ளும் சில அர­சாங்க அமைப்­பு­களைக் கலைப்­ப­தற்­குப் பரிந்­து­ரை­கள் வந்­த­தா­கத் திரு அன்­வார் சொன்­னார்.

"காவல்­து­றை­யும் மலே­சிய ஊழல் தடுப்­புப் பிரி­வும் கையா­ளக்­கூ­டிய விவ­கா­ரங்­க­ளுக்­கென உரு­வாக்­கப்­பட்ட அமைப்­பு­க­ளைக் குறைக்­க­வேண்­டும். ஒரே செயலை மேற்­கொள்ள பல அமைப்­பு­கள் இருந்­தால் அவை ஒவ்­வொன்­றையும் நிர்­வ­கிக்­கக் கூடு­தல் செல­வா­கும்," என்று திரு அன்­வார் குறிப்­பிட்­டார்.

கலைக்­கப்­பட்ட மற்ற சில அர­சாங்க அமைப்­பு­க­ளைப் பற்­றிய விவ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை.

இதற்­கி­டையே, பிர­த­ம­ரின் வேலைச் சுமை­யைக் குறைக்க வேறொ­ரு­வ­ருக்கு ஒப்­ப­டைக்­கக்­கூடிய பணி­க­ளைத் தாமும் மூத்த அர­சாங்­கச் செய­லா­ளர் முகம்­மது ஸுக்கி அலி­யும் அடை­யா­ளம் கண்­ட­தா­க­வும் திரு அன்­வார் தெரி­வித்­தார்.

"பல பொறுப்­பு­களை நான் விட்டுக்­கொ­டுத்­து­விட்­டேன். சில பொறுப்­பு­க­ளைத் துணைப் பிர­த­மர் கையா­ள­லாம் என்­ப­தே அதற்­குக் கார­ணம்," என்­றார் திரு அன்­வார்.

மலேசியா: முகைதீனின் தேசிய மீட்பு நிலையத்தைப் பிரதமர் அன்வார் கலைத்தார்