கோலாலம்பூர்: மலேசியாவின் கெண்டிங் பகுதியில் உள்ள பாத்தாங் காலி எனும் இடத்தில் சென்ற வாரம் நேர்ந்த நிலச்சரிவில் ஆகக் கடைசி நிலவரப்படி மாண்டோரின் எண்ணிக்கை 26க்கு அதிகரித்தது. தனது நாயை இறுக்கமாக அணைத்தபடி மாண்டுகிடந்த ஓர் ஆடவரின் உடலை மீட்புப் பணியாளர்கள் நேற்று மீட்டெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமையன்று உரிமமின்றி அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாம் இருந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்றிரவு நிலவரப்படி இன்னும் ஏழு பேரைக் காணவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முகாம்களை நடத்தும் நிறுவனங்கள் வருவாயை இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்தகைய நிறுவனங்களின் முகாம்களைப் பயன்படுத்துவதற்கு செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பலர் மீட்டுக்கொள்கின்றனர். சில நிறுவனங்கள் இதுவரை மட்டுமே சுமார் 6,000 ரிங்கிட் (1,825 வெள்ளி) தொகையை இழந்துள்ளன.

