மலாக்கா: மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் ஒரு எட்டு வயது சிறுமி மூழ்கி உயிரிழந்தார். அந்தப் பூங்காவில் உள்ள 'வேவ் பூல்' எனப்படும் செயற்கை அலைகள் உருவாக்கப்படும் நீச்சல் குளத்தில் சிறுமி நேற்று மரணமடைந்தார்.
ஜோகூரைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது அண்டை வீட்டாருடன் ஆலோர் காஜா பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அச்சம்பவம் நிகழ்ந்தது. அவரின் பெயர் சோஃபியா ஹானிஸ் டானியா ஜமாலுதீன் என்று அப்பகுதியின் காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் கோத்தா திங்கியில் உள்ள சுங்கை துவான்சி ெசடெலி என்ற கிரமாத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

