தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படகில் சிக்கித் தவிக்கும் 100 ரோஹிங்யா அகதிகள்

1 mins read
316f4ca9-50d9-4f01-976e-d69a5eec107a
-

மும்பை: இந்­தி­யா­வின் அந்­த­மான் தீவு­க­ளுக்கு அருகே உள்ள கடற்­பகு­தி­யில் படகு ஒன்­றில் குறைந்­தது 100 ரோஹிங்யா அக­தி­கள் சிக்­கித் தவிக்­கின்­ற­னர். அவர்­களில் 16லிருந்து 20 பேர் மர­ண­ம­டைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று மியன்­மா­ரைச் சேர்ந்த இரண்டு ரோஹிங்யா போராளி குழுக்­கள் தெரி­வித்­துள்­ளன.

நேற்று முன்­தி­னம் இந்­தி­யா­வைச் சேர்ந்த ஐந்து கப்­பல்­கள் அந்­தப் படகை நோக்­கிச் சென்­ற­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் வெளி­யிட்ட தக­வல்­கள் குறிப்­பிட்­டன. இந்த விவ­கா­ரம் குறித்­துத் தங்­க­ளி­டம் தக­வல் ஏதும் இல்லை என்று இந்­தி­யக் கடற்­ப­டை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

சில நாள்­க­ளுக்கு முன்பு இந்­தி­யப் பெருங்­க­ட­லில் சிக்­கி­யி­ருந்த 104 ரோஹிங்யா அக­தி­களை இலங்­கை­யின் ராணு­வப் படை­யி­னர் மீட்­ட­னர்.

இதற்­கி­டையே, ஆள்­க­டத்­தல் கும்­ப­லில் இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 12 பேரை மியன்­மார் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர் என்று அந்­நாட்டு ராணு­வம் தெரி­வித்­தது. சந்­தேக நபர்­களுக்­கும் இம்­மா­தம் ஐந்­தாம் தேதி­யன்று ஹ்லெகு நக­ரில் 13 ரோஹிங்யா அக­தி­கள் மாண்டு கிடந்­த­தற்­கும் தொடர்­பி­ருப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

யங்கூன் நக­ருக்கு அருகே உள்ள ஹ்லெ­கு­வின் ஒரு பகு­தி­யைக் காவல்­து­றை­யி­னர் இம்­மா­தம் ஒன்­ப­தாம் தேதி­யன்று சோத­னை­யிட்­ட­னர். அப்­போது ஆள்­கடத்­த­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஐந்து வாக­னங்­க­ளை­யும் ஒரு எண்­ணெய்க் கப்­ப­லை­யும் முடக்­கப்­பட்­ட­தாக மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கம் குறிப்­பிட்­டது.

ஆள்­க­டத்­தல் கும்­பல் மேற்கு ராக்­கைன் மாநி­லத்­தி­லி­ருந்து 255 ரோஹிங்யா அக­தி­க­ளைக் கடத்­தி­ய­தா­க­த் தெரி­விக்­கப்­பட்­டது. அக­தி­கள் கடத்­திச் செல்­லப்­பட்ட இடம் குறித்த தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.