தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரில் அமைதி திரும்ப ஐநா தீர்மானம் நிறைவேற்றம்

2 mins read
e178ec01-e3c6-4141-b5a6-f67d5ebc8d91
-

ஐநா: ஐநா பாது­காப்பு மன்­றம், 74 ஆண்­டு­களில் முதன்­மு­த­லாக மியன்­மார் தொடர்­பில் முதல் தீர்­மானத்தை நிறை­வேற்­றி­யது.

அந்நாட்­டில் வன்­செ­யல்­களுக்கு முடி­வு­கட்ட வேண்­டும். ஆங் சான் சூச்சி அம்­மை­யார், 77, உள்­ளிட்ட அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் ராணுவ நிர்­வாகம் விடு­தலை செய்ய வேண்­டும் என்று அந்­தத் தீர்­மா­னம் கேட்­டுக்­கொண்­டது.

மியன்­மார் பிரச்­சி­னையை எப்படி கையா­ளு­வது என்­பது தெரி­யா­மல் இவ்­வ­ளவு கால­மும் 15 உறுப்­பினர்­களைக் கொண்ட பாது­காப்பு மன்­றம் தடு­மாறி வந்­தது.

மியன்­மா­ருக்கு எதி­ராகக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கக் கூடாது என்று சீனா­வும் ரஷ்­யா­வும் வாதிட்டு வந்­தன. மியன்­மார் தொடர்­பான தீர்­மானம் புதன்­கி­ழமை வாக்­கெடுப்புக்கு வந்­த­போது சீனா, ரஷ்­யா­வு­டன் இந்­தி­யா­வும் வாக் ெகடுப்­பில் கலந்­து­கொள்­ள­வில்லை.

எஞ்­சிய 12 உறுப்பு நாடு­களும் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­களித்­தன. மியன்­மா­ரில் ஏறக்­குறைய இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் சூச்சி அம்­மை­யா­ரின் அர­சாங்­கம் நடந்து வந்­தது.

அந்த அர­சைக் கவிழ்த்து ­விட்டு ராணு­வம் நாட்டை தன்­வ­சப்­ப­டுத்­திக் கொண்­டது. சூச்சி அம்­மை­யா­ரைச் சிறைப்­ப­டுத்­தி­யது.

ராணுவ ஆட்­சியை எதிர்த்­த­வர்­கள் நசுக்­கப்­பட்­ட­னர். சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர். ஜன­நா­யக ஆத­ரவு ஆர்ப்­பாட்டக்­கா­ரர்­களை ராணு­வம் ஒடுக்­கி­ய­தில் 2,500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கொல்­லப்­பட்­ட­தாக உள்­ளூர் தக­வல்­கள் தெரி­வித்­தன.

மியன்­மா­ரில் அனைத்­து­ வகை வன்­செ­யல்­களும் முடி­வுக்கு வர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்ட ஐநா தீர்­மா­னம், மனித உரி­மை­கள் கடைப்பிடிக்கப்பட வேண்­டும்; அடிப்­படை சுதந்­தி­ரம் கட்­டிக்­காக்­கப்­பட வேண்டும்; சட்­ட ஆட்சி நடக்க வேண்­டும் என்று கோரி­யது.

மியன்­மார் தொடர்­பில் இதற்கு முன்­ன­தாக ஐநா பாது­காப்பு மன்றம் 1948ல் ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது. மியன்­மார் ஐநா­வில் உறுப்பு நாடாக அந்­தத் தீர்மானம் வகை செய்­தது.

மியன்­மார் தொடர்­பான தீர்­மா­னம் 2008ல் விவா­தத்­துக்கு வந்­த­போது, சீனா­வும் ரஷ்­யா­வும் வீட்டோ அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­தியதால் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

பிறகு மியன்­மா­ரில் இருந்து 700,000 அக­தி­கள் பக்­கத்து பங்­ளா­தேஷ் நாட்­டிற்கு உயிர்­தப்பி ஓடி­னர். அதைத் தொடர்ந்து பிரிட்­டன் 2018 டிசம்­ப­ரில் மியன்­மா­ருக்கு எதி­ரான ஒரு தீர்­மா­னத்தை நிறை­வேற்ற முயன்­றது. ஆனால், வாக்­கெ­டுப்பு நடக்­கவே இல்லை.