வெள்ளம்: ஜோகூர் மாநிலம் ஆயத்தமாகிறது

வெள்ளம்: ஜோகூர் மாநிலம் ஆயத்தமாகிறது

2 mins read
3fa30892-93f6-4391-86be-2c6efe6c1655
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வில் பரு­வ­மழை கார­ண­மாக திரங்­கானு, கிளந்­தான் மாநி­லங்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

பரு­வ­மழை அடுத்­த­தாக ஜோகூர் மாநி­லத்தை நோக்கி திரும்­பு­கிறது. இத­னால் அம் மாநில மக்­கள் வெள்­ளத்­தைச் சமா­ளிக்க ஆயத்­த­மாகி வரு­கிறார்­கள். அந்த மாநி­லத்­தில் மழை அதி­கம் பெய்­தால் கம்­போங் பாசிர் என்ற கிரா­மத்­தில்­தான் முதன்­மு­த­லாக வெள்­ளம் ஏற்­படும். அந்­தக் கிரா­மம் சுங்கை ஸ்கூ­டா­யில் அமைந்திருக்­கிறது.

"வெள்­ள­மும் அலை­யேற்­ற­மும் சேர்ந்து கொண்­டால் முதன்­முதலாக கம்­போங் பாசிரைத் தான் பாதிக்­கும். இந்­தக் கிரா­மத்­தில் மொத்­தம் 1,188 வீடு­கள் இருக்­கின்­றன.

"அடுத்­த­டுத்­தாக பக்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய கிரா­மங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­வி­டும்," என கம்­போஸ் பாசிர் கிரா­மத் தலை­வர் ஸாய்னி சினோங் கூறினார்.

"பல­வற்­றை­யும் தயார்நிலை­யில் வைத்து இருக்­கி­றோம். தொண்­டூ­ழி­யர்­கள் தயா­ராக உள்ளனர். கிரா­மத்­தி­னருக்கு தற்­கா­லிக நிவா­ர­ணம் முகாம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

இத­னி­டையே, மலே­சி­யா­வின் பாத்தாங் காலி­யில் அண்­மை­யில் ஏற்­பட்ட நிலச்­ச­ரிவை அடுத்து தாங்கள் முழு விழிப்­பு­நி­லை­யில் இருப்­ப­தாக ஜோகூர் மாநில தீயணைப்பு, மீட்­புத் துறை­யின் இடைக்­கால இயக்­கு­நர் முகம்­மது ரிசால் புவாங் கூறி­னார்.

மொத்­தம் உள்ள 1,501 அதி­காரி­களில் 20 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே விடு­முறை அளிக்­கப்­பட்டு இருப்­ப­தா­கக் கூறி­னார். அவர்­களும் எந்த நிலை­யி­லும் தயா­ராக இருக்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ள­தாக அவர் கூறி­னார்.

மக்­கள், குறிப்­பாக தாழ்­வான பகு­தி­யில் வசிப்­போர் எப்­போ­துமே எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

மலே­சி­யா­வில் வெள்­ளம் கார­ண­மாக இது­வ­ரை­ ஐவர் உயி­ரிழந்­து­விட்­ட­னர். 20,000 பேர் நிவாரண முகாம்­களில் தங்கி இருக்­கி­றார்­கள். 70,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரி­விக்­கப்படுகிறது.