பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் பெரும் பாலும் பெட்டாலிங் ஜெயாவில் 110 சந்தைகள், சிறு பகுதிவாரிக் கடைகள், சில்லறைக் கடைகள், சிறிய அங்காடிக்கடைகள் ஆகியவற்றில் 40% கடைகளில் முட்டைத் தட்டுப்பாடு நிலவுவதாக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
அடிப்படைத் தேவைகள் தொடர்பில் அமலாக்க அதிகாரிகள் அந்த மாநிலம் முழுவதும் நான்கு நாள் சோதனை நடத்தினர்.
அதையடுத்து இந்த நிலவரம் தெரியவந்துள்ளது. சில்லறை வர்த்தகர்கள் 2022ல் பல மாதங்களில் முட்டை பற்றாக்குறையை எதிர்நோக்கினர். மலேசியர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 968 மில்லியன் கோழி முட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

