பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மத்திய வட்டாரத்தில் துப்பாக்கிக்காரன் சுட்டதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குர்திய கலாசார நிலையத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 69 வயது ஆடவரைக் காவல்துறை தடுத்து வைத்துள்ளது. தாக்குதலில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவரிடமிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே ரயில் நிலையம் அமைந்திருப்பதாகவும் அது பரபரப்பான பகுதி என்றும் கூறப்பட்டது.
ஏழு அல்லது எட்டுமுறை துப்பாக்கியால் சுட்ட சத்தத்தைக் கேட்க முடிந்ததாக சம்பவ இடத்தில் இருந்த பெண் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

