வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின உரையை ஆற்றியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் பேசிய அவர், அதிகம் பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவிற்கு புதிய தொடக்கம் அமையட்டும் என்று வாழ்த்தினார்.
நாட்டின் அரசியலை பாதித்து, மக்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் 'நச்சு' நீங்கவேண்டும் என்று தாம் வேண்டிக்கொள்வதாக அதிபர் பைடன் குறிப்பிட்டார்.
அவரது உரை, உறவைப் புதுப்பித்தல், ஒற்றுமை ஆகிய அம்சங்களை மையப்படுத்தி அமைந்திருந்தது. "ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற அடையாளங்களுக்கு அப்பால் சக அமெரிக்கர்கள், சக மனிதர்கள் என்ற முறையில் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்," என்று கூறிய அவர், கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் அன்பைப் பரப்பும்படி அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.

